உலகப்பொதுமறை என்று போற்றப்படும் நம் திருக்குறளில் ஒரு சில குறள்களில் உள்ள அனைத்து அசைகளிலும்(சொல்) உதடு ஒட்டி வரும். அத்தகைய சிறப்பமைந்த குறள்கள் இதோ...
2 வான்சிறப்பு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12
6 வாழ்க்கைத் துணை நலம்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 60
24 புகழ்
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். 232
35 துறவு
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. 344
50 இடனறிதல்
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். 492
61 மடியின்மை
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. 603
64 அமைச்சு
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. 631
69 தூது
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. 688
92 வரைவின் மகளிர்
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. 920
123 பொழுது கண்டு இரங்கல்
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. 1229
133 ஊடல் உவகை
புல்லி விடாப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. 1324
Monday, April 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the MP3 e MP4, I hope you enjoy. The address is http://mp3-mp4-brasil.blogspot.com. A hug.
நன்று.. சுவையான தகவல்.
அரிய தகவலைக் கொடுத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
nandri manathin osai...
varugaikkum, vaazhthukalukkum nandri agaram Amutha....
Post a Comment