மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
கயமைத் தனம் நிறைந்தவர் மனிதரல்லர். அவ்வாறு கீழான உயிர்களும் மனிதர் போலவே தோற்றமளிப்பது வேறு எங்கும் காண்பது அரிது.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
நன்மை அறிந்து செய்பவர் அது குறித்து கவலையுடன் சிந்தித்திருப்பர். கயவர்களோ அப்படி கவலை கொள்ள தேவையில்லை ஆதலால் கொடுத்து வைத்தவர்கள்.
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
தாம் நினைப்பதை செய்து வருவதால் தேவர்களும், கயவர்களும் ஒரு தன்மை உடையவரே. என்ன, கயவர்கள் பிறருக்கு தீமை செய்வார்கள்.
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
தம்மினும் சிறியோரைக் கண்டால் அவரை விடத் தாம் மேல் என்று கர்வம் கொள்வார் கீழ் மக்கள்.
அகப்பட்டி - உள் அடங்குவர், தம்மினும் கீழோர்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
தமது தவறுக்கு கிடைக்கும் தண்டணை குறித்த அச்சமும், தாம் விரும்பிய பொருளுக்காகவும் சிறிதளவு ஒழுக்கத்தைக் கடை பிடிப்பர்.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
தாம் கேட்ட பிறர் அறியாத செய்திகளை கயவர் உடன் பிறருக்கு சொல்லி விடுவர் (தம்மை பெரியவனாக காட்டுதற்காக). அவ்வகையில் அவர்கள் பறை அறிவிப்பவனை ஒத்தவர்கள்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
எளியவர்களுக்கு (பருக்கை விழுந்து விடும் என்று) தம் எச்சில் கையால் கூட இல்லை என ஆட்டாதவர்கள், கையை முறுக்கி கன்னத்தில் குத்து விடும் வன்மை நிறைந்தவர்களுக்குத் தருவர்.
கொடிறு - கன்னம், கதுப்பு
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
சான்றோரிடம் தம் தேவையை சொன்னாலே நடவடிக்கை எடுப்பர். கயவரோ, கரும்பைப் பிழிவது போல் பிழிந்தால் தான் பயன்படுவர்.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
கயவர் பிறர் நன்கு உடுப்பதையம், உண்பதையும் கண்டாலே பொறாமையால் குற்றம் கற்பிக்க வல்லவர்கள்.
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
தமக்கு வந்த துன்பத்தைக் காரணம் காட்டி ஆதாயம் தேடுவதைத் தவிர கயவரால் இயலுவது வேறு ஏது?
Showing posts with label ஒழிபியல். Show all posts
Showing posts with label ஒழிபியல். Show all posts
Saturday, November 17, 2007
பொருட்பால் - ஒழிபியல் - இரவச்சம் -107
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
இல்லையென்று சொல்லாதவரிடத்தும் வறுமையால் சென்று இரந்து கேட்காமை, இரப்பதால் கிடைக்கும் கோடிப் பொருளுக்கு ஒப்பாகும்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
இரந்து உயிர் வாழ்வதும் தொழில் என்றால் அவ்வாறு உலகைப் படைத்தவன் தானும் அலைந்து அழிவானாக. இரப்பதால் அன்றி உழைத்துப் பிழைக்க வேண்டும்.
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
வறுமையால் வரும் துன்பத்தை இரந்து தீர்க்கலாம் என்று கருதினால் அதைவிட கொடுமை வேறு இல்லை.
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
வறுமையால் துன்புற்ற நிலையிலும் பிறரிடம் இரந்து கேட்காதிருத்தல் மாபெரும் சிறப்பத் தரும்.
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
இருப்பது தெளிந்த நீரும், சிறு அரிசிக் கஞ்சி ஆனாலும் உழைத்துப் பெற்றதால் உண்பதற்கு அவற்றை விட இனிமையானது இல்லை.
அடுபுற்கை - சிறு அரிசிக் கஞ்சி
தாள் - முயற்சி
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
தவிக்கும் பசுவுக்கான நீர் என்று கேட்டாலும் இரந்து கேட்ட நாவிற்கு இழிவே.
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
இரப்பவருக்கு இல்லை என்று சொல்பவரிடம் இரந்து கேட்க வேண்டாம் என்று இரந்து கேட்டுக் கொள்கிறேன்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
வறுமையில் இருந்து விடுபட ஏறும் இரத்தல் என்னும் காவலற்ற தோணி இல்லை என்போர் கல்நெஞ்சில் மோதி உடைந்து விடும்.
ஏமாப்பு இல் - காவலற்ற
பக்கு - பிளந்து
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
இரத்தலை நினைத்தால் உள்ளம் உருகும். இல்லை என்று கூறவதை நினைத்தால் உள்ளமே இல்லாது நொறுங்கி விடும்.
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
இரந்து கேட்பவர் இல்லை என்ற சொல்லைக் கேட்ட உடன் அவமானத்தால் உயிர் துறப்பர். இல்லை என்று சொன்னவன் உயிரற்ற உடல் ஆதலால் உயிர் எங்கே ஒளிந்திருக்குமோ?
இரவாமை கோடி உறும்.
இல்லையென்று சொல்லாதவரிடத்தும் வறுமையால் சென்று இரந்து கேட்காமை, இரப்பதால் கிடைக்கும் கோடிப் பொருளுக்கு ஒப்பாகும்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
இரந்து உயிர் வாழ்வதும் தொழில் என்றால் அவ்வாறு உலகைப் படைத்தவன் தானும் அலைந்து அழிவானாக. இரப்பதால் அன்றி உழைத்துப் பிழைக்க வேண்டும்.
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
வறுமையால் வரும் துன்பத்தை இரந்து தீர்க்கலாம் என்று கருதினால் அதைவிட கொடுமை வேறு இல்லை.
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
வறுமையால் துன்புற்ற நிலையிலும் பிறரிடம் இரந்து கேட்காதிருத்தல் மாபெரும் சிறப்பத் தரும்.
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
இருப்பது தெளிந்த நீரும், சிறு அரிசிக் கஞ்சி ஆனாலும் உழைத்துப் பெற்றதால் உண்பதற்கு அவற்றை விட இனிமையானது இல்லை.
அடுபுற்கை - சிறு அரிசிக் கஞ்சி
தாள் - முயற்சி
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
தவிக்கும் பசுவுக்கான நீர் என்று கேட்டாலும் இரந்து கேட்ட நாவிற்கு இழிவே.
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
இரப்பவருக்கு இல்லை என்று சொல்பவரிடம் இரந்து கேட்க வேண்டாம் என்று இரந்து கேட்டுக் கொள்கிறேன்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
வறுமையில் இருந்து விடுபட ஏறும் இரத்தல் என்னும் காவலற்ற தோணி இல்லை என்போர் கல்நெஞ்சில் மோதி உடைந்து விடும்.
ஏமாப்பு இல் - காவலற்ற
பக்கு - பிளந்து
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
இரத்தலை நினைத்தால் உள்ளம் உருகும். இல்லை என்று கூறவதை நினைத்தால் உள்ளமே இல்லாது நொறுங்கி விடும்.
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
இரந்து கேட்பவர் இல்லை என்ற சொல்லைக் கேட்ட உடன் அவமானத்தால் உயிர் துறப்பர். இல்லை என்று சொன்னவன் உயிரற்ற உடல் ஆதலால் உயிர் எங்கே ஒளிந்திருக்குமோ?
பொருட்பால் - ஒழிபியல் - இரவு - 106
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
வறுமையில் இருப்பவர் கொடுக்கும் தன்மை உடையவரிடம் இரந்து கேட்கலாம். அவர் தரவில்லை எனில் அவருக்குத் தான் பழி ஏற்படும்.
கரப்பு - மறைத்தல்
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
துன்பம் இன்றி இரந்து பெறுவது ஒருவருக்கு இன்பமே. இரப்பவர் துன்பப்படாதவாறு ஈதல் வேண்டும்.
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
திறந்த மனதோடு ஈதல் தம் கடமை என உணர்ந்தவரிடம் இரந்து நிற்பதும் பெருமையே.
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
இருப்பதை இல்லையென்று கனவிலும் கூறாதவர் முன் இரந்து கேட்டல் கொடுப்பது போன்றதே.
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.
இருப்பதை இல்லையென்று சொல்லாதவர்கள் இருப்பதால் தான் அவர்களிடம் சென்று இரப்பவர்கள் உள்ளனர். இல்லையெனில் யாரிடமும் இரந்து கேட்காமல் உயிர் விடுவர்.
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
இருப்பதை இல்லையென்று சொல்லும் நோய் இல்லாதவர்களைக் கண்டால் வறுமையால் வரும் துன்பம் உடனே அழியும்.
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
இரப்பவரை இகழ்ந்து எள்ளாமல் தருபவரைக் கண்டால், இரப்பவர் எள்ளம் மகிழ்ந்து உவக்கும்.
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
வறுமையால் இரப்பவர் இல்லை எனில் ஈரம் நிறைந்த இந்தப் பெரிய உலகம் உயிரற்ற மரப்பாவைகள் உலவும் இடமாகத் தோன்றும். இரப்பவர் இல்லை எனில் ஈவது இல்லை, ஆதலால் அனைவரும் உயிரற்றவர்கள்.
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
இரந்து கொள்பவர் இல்லாத போது, கொடுப்பவருக்கு புழ் உண்டாகும் வழி இல்லை.
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
இரந்து கேட்பவன் இல்லையென்போரிடம் சினம் கொள்ளக் கூடாது. தன்னைப் போலவே பிறரிடமும் வறுமை துன்பம் இருக்கலாம் எனபவதற்கு அவன் வறுமையே சான்று.
கரி -சான்று
அவர்பழி தம்பழி அன்று.
வறுமையில் இருப்பவர் கொடுக்கும் தன்மை உடையவரிடம் இரந்து கேட்கலாம். அவர் தரவில்லை எனில் அவருக்குத் தான் பழி ஏற்படும்.
கரப்பு - மறைத்தல்
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
துன்பம் இன்றி இரந்து பெறுவது ஒருவருக்கு இன்பமே. இரப்பவர் துன்பப்படாதவாறு ஈதல் வேண்டும்.
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
திறந்த மனதோடு ஈதல் தம் கடமை என உணர்ந்தவரிடம் இரந்து நிற்பதும் பெருமையே.
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
இருப்பதை இல்லையென்று கனவிலும் கூறாதவர் முன் இரந்து கேட்டல் கொடுப்பது போன்றதே.
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.
இருப்பதை இல்லையென்று சொல்லாதவர்கள் இருப்பதால் தான் அவர்களிடம் சென்று இரப்பவர்கள் உள்ளனர். இல்லையெனில் யாரிடமும் இரந்து கேட்காமல் உயிர் விடுவர்.
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
இருப்பதை இல்லையென்று சொல்லும் நோய் இல்லாதவர்களைக் கண்டால் வறுமையால் வரும் துன்பம் உடனே அழியும்.
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
இரப்பவரை இகழ்ந்து எள்ளாமல் தருபவரைக் கண்டால், இரப்பவர் எள்ளம் மகிழ்ந்து உவக்கும்.
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
வறுமையால் இரப்பவர் இல்லை எனில் ஈரம் நிறைந்த இந்தப் பெரிய உலகம் உயிரற்ற மரப்பாவைகள் உலவும் இடமாகத் தோன்றும். இரப்பவர் இல்லை எனில் ஈவது இல்லை, ஆதலால் அனைவரும் உயிரற்றவர்கள்.
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
இரந்து கொள்பவர் இல்லாத போது, கொடுப்பவருக்கு புழ் உண்டாகும் வழி இல்லை.
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
இரந்து கேட்பவன் இல்லையென்போரிடம் சினம் கொள்ளக் கூடாது. தன்னைப் போலவே பிறரிடமும் வறுமை துன்பம் இருக்கலாம் எனபவதற்கு அவன் வறுமையே சான்று.
கரி -சான்று
பொருட்பால் - ஒழிபியல் - குடி - செயல்வகை - 103
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
தான் மேற்கொண்ட நற்செயலை கைவிடேன் என்னும் பெருமையை விட பெருமிதம் கொள்ளத்தக்கது வேறு இல்லை.
துவ்வுதல் - நீங்குதல், எதிர்ப்பதம் - துவ்வா
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
மனித முயற்சியும், நிறைந்த அறிவும் கொண்டு செய்யப் படும் பெருஞ்செயலால் குடிப்பெருமை உயரும்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
குடிப்பெருமை உயரும் செயலுக்கு ஒருவர் முன் வரும் போது தெய்வமும் ஆடை வரிந்து கட்டி உதவிக்கு முன்னால் வரும்.
மடி - ஆடை
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
தமது குடியை காப்பதற்கு விரைந்து முயல்பவருக்கு செயலானது ஆலோசனை தேவைப்படாது தானே விரைந்து முடியும்.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
பிறர் குற்றம் காணாத வகையில் குட்பெருமை காத்து வாழ்பவனை தம் சுற்றம் என உலகோர் விரும்பி வாழ்வர்.
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
நல்ல ஆண்மை என்பது ஒருவன் தான் பிறந்த குடியை அதன் நறபெயர் கெடாதவாறு ஆளும் தகுதியை ஏற்படுத்திக் கொள்வதாகும்.
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
களத்தில் படையை நடத்தும் ஆற்றலுடையவரைப் போன்றவரால் மட்டுமே தம் குடியையையும் அதன் புகழ் குன்றாமல் வழி நடத்த இயலும்.
அமரகம் - போர்க்களம்
வன்கண்ணர் - வலுமை மிகுந்தவர்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
குடி உயத்தும் செயலில் உள்ளவர்க்கு எந்நேரமும் தகுந்த நேரமே. சோம்பலால் காலம் கருதி, மானம் காக்க எண்ணிணால் செயல் நிறைவேறாது.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
தன் குடியை குற்றத்திலிருந்து காக்க எண்ணுபவன் உடல் துன்பத்திற்கே கொள்கலன் போன்றதாகும்.
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
துன்பம் வரும் போது தாங்கி காப்பதற்கு தகுந்த ஆள் இல்லை எனில் அக்குடி துன்பத்தால் வீழும்.
பெருமையின் பீடுடையது இல்.
தான் மேற்கொண்ட நற்செயலை கைவிடேன் என்னும் பெருமையை விட பெருமிதம் கொள்ளத்தக்கது வேறு இல்லை.
துவ்வுதல் - நீங்குதல், எதிர்ப்பதம் - துவ்வா
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
மனித முயற்சியும், நிறைந்த அறிவும் கொண்டு செய்யப் படும் பெருஞ்செயலால் குடிப்பெருமை உயரும்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
குடிப்பெருமை உயரும் செயலுக்கு ஒருவர் முன் வரும் போது தெய்வமும் ஆடை வரிந்து கட்டி உதவிக்கு முன்னால் வரும்.
மடி - ஆடை
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
தமது குடியை காப்பதற்கு விரைந்து முயல்பவருக்கு செயலானது ஆலோசனை தேவைப்படாது தானே விரைந்து முடியும்.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
பிறர் குற்றம் காணாத வகையில் குட்பெருமை காத்து வாழ்பவனை தம் சுற்றம் என உலகோர் விரும்பி வாழ்வர்.
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
நல்ல ஆண்மை என்பது ஒருவன் தான் பிறந்த குடியை அதன் நறபெயர் கெடாதவாறு ஆளும் தகுதியை ஏற்படுத்திக் கொள்வதாகும்.
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
களத்தில் படையை நடத்தும் ஆற்றலுடையவரைப் போன்றவரால் மட்டுமே தம் குடியையையும் அதன் புகழ் குன்றாமல் வழி நடத்த இயலும்.
அமரகம் - போர்க்களம்
வன்கண்ணர் - வலுமை மிகுந்தவர்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
குடி உயத்தும் செயலில் உள்ளவர்க்கு எந்நேரமும் தகுந்த நேரமே. சோம்பலால் காலம் கருதி, மானம் காக்க எண்ணிணால் செயல் நிறைவேறாது.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
தன் குடியை குற்றத்திலிருந்து காக்க எண்ணுபவன் உடல் துன்பத்திற்கே கொள்கலன் போன்றதாகும்.
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
துன்பம் வரும் போது தாங்கி காப்பதற்கு தகுந்த ஆள் இல்லை எனில் அக்குடி துன்பத்தால் வீழும்.
Labels:
ஒழிபியல்,
குடி செயல்வகை,
திருக்குறள்,
பொருட்பால்
பொருட்பால் - ஒழிபியல் - நன்றியில் - செல்வம் - 101
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
வீடு கொள்ளாது பொருள் சேர்த்தவன் அதை பயன்படுத்தவில்லை எனில் இறந்தவனைப் போல் அச்செல்வத்தால் செய்யக் கூடியது எதுவுமில்லை.
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
பொருளால் எல்லாம் நிறைவேற்ற இயலும் என்று கருதா எவருக்கும் தராமல் மயங்குபவன் பிறப்பு நிறைவு இல்லாதது.
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
பொருளாசையால் (பொருள் தராத) புகழ் (தரும் செயல்) வேண்டாம் என்பவர் நிலத்திற்கு சுமையாவார்.
ஈட்டம் - பொருளீட்டுவது
இவறி - ஆசைப்பட்டு
இசை - புகழ்
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
ஒருவராலும் (ஈயாமையால்) விரும்பப் படாதவன், தனக்குப் பின் எஞ்சுவது எது எனக் எதைக் கருதுவானோ?
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
பிறருக்கு கொடுத்தல், பிற வழிகளில் பயன்படுத்துதல் போன்ற இயல்பு இல்லாதவர்கள் செலவின்றி கோடிக் கோடியாய் பொருள் சேர்ப்பதால் எதுவும் பெறுவது இல்லை.
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
தானும் பயன்படுத்தாமல், தகுதி உடையவருக்கும் தராமல் இருப்பவன் தான் வைத்திருக்கும் பெருஞ்செல்வத்திற்கு நோயைப் போன்றவன்.
ஏதம் - நோய்.
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
இல்லாதவருக்கு ஈயாமல் இருக்கும் செல்வம் அனைத்துச் சிறப்புகளும் பெற்ற கன்னி தனிமையாய் இருந்து மூப்பெய்துவதைப் போன்றது.
தமியள் - தனிமையாய் இருப்பவள்
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
எவரும் விரும்பாதவன் சேர்த்த செல்வம் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது.
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
பிறரிடம் அன்பு கொள்ளாமல், தன்னையும் வருத்தி, அறம் கருதாது சேர்த்த பெருஞ்செலவத்தை பிறர் எடுத்துக் கொண்டு விடுவர்.
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
புகழ் உடையவரின் சிறு வறுமையும் மேகம் நீரின்றி வறண்டு போவதைப் போல் மிகுந்த துன்பம் ஏற்படுத்துவது.
துனி - வறுமை
செத்தான் செயக்கிடந்தது இல்.
வீடு கொள்ளாது பொருள் சேர்த்தவன் அதை பயன்படுத்தவில்லை எனில் இறந்தவனைப் போல் அச்செல்வத்தால் செய்யக் கூடியது எதுவுமில்லை.
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
பொருளால் எல்லாம் நிறைவேற்ற இயலும் என்று கருதா எவருக்கும் தராமல் மயங்குபவன் பிறப்பு நிறைவு இல்லாதது.
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
பொருளாசையால் (பொருள் தராத) புகழ் (தரும் செயல்) வேண்டாம் என்பவர் நிலத்திற்கு சுமையாவார்.
ஈட்டம் - பொருளீட்டுவது
இவறி - ஆசைப்பட்டு
இசை - புகழ்
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
ஒருவராலும் (ஈயாமையால்) விரும்பப் படாதவன், தனக்குப் பின் எஞ்சுவது எது எனக் எதைக் கருதுவானோ?
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
பிறருக்கு கொடுத்தல், பிற வழிகளில் பயன்படுத்துதல் போன்ற இயல்பு இல்லாதவர்கள் செலவின்றி கோடிக் கோடியாய் பொருள் சேர்ப்பதால் எதுவும் பெறுவது இல்லை.
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
தானும் பயன்படுத்தாமல், தகுதி உடையவருக்கும் தராமல் இருப்பவன் தான் வைத்திருக்கும் பெருஞ்செல்வத்திற்கு நோயைப் போன்றவன்.
ஏதம் - நோய்.
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
இல்லாதவருக்கு ஈயாமல் இருக்கும் செல்வம் அனைத்துச் சிறப்புகளும் பெற்ற கன்னி தனிமையாய் இருந்து மூப்பெய்துவதைப் போன்றது.
தமியள் - தனிமையாய் இருப்பவள்
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
எவரும் விரும்பாதவன் சேர்த்த செல்வம் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது.
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
பிறரிடம் அன்பு கொள்ளாமல், தன்னையும் வருத்தி, அறம் கருதாது சேர்த்த பெருஞ்செலவத்தை பிறர் எடுத்துக் கொண்டு விடுவர்.
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
புகழ் உடையவரின் சிறு வறுமையும் மேகம் நீரின்றி வறண்டு போவதைப் போல் மிகுந்த துன்பம் ஏற்படுத்துவது.
துனி - வறுமை
Labels:
ஒழிபியல்,
திருக்குறள்,
நன்றியில் செல்வம்,
பொருட்பால்
Friday, November 16, 2007
பொருட்பால் - ஒழிபியல் - பண்புடைமை - 100
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
அணுகுவதற்கு எளியவராயிருந்தால் யாவரும் பண்புடைமை என்னும் பண்பை எளிதில் பெற்றிடலாம்.
எண்பதம் - எளியவராய் இருத்தல்
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
நல்ல குடியில் பிறத்தலும், அன்புடன் பழகுவதும் பண்புடைமை எனப்படும்.
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
மனித உறுப்புகள் ஒத்திருப்பதால் மட்டும் ஒருவர் மனிதர் ஆக மாட்டார். நற்பண்புகள் ஒத்திருப்பதால் ஒருவர் மனிதர் எனப்படுவார்.
வெறுத்தக்க - நெருங்கத் தக்க
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
நீதி வழுவாமல் நன்மை செய்யும் பயனுடையவரின் பண்பை உலகம் பாராட்டும்.
நயன் - நீதி
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
சிரித்து மகிழும் பொழுதும் இகழ்வது துன்பம் தருவதாகும். ஆதலால் பண்பாளர்கள் பகைவரிடமும் பண்புடன் நடந்து கொள்வார்கள்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
பண்புடையவர்கள் இருப்பதால் இவ்வுலகம் உயிர்ப்போடு இருக்கிறது. இல்லையெனில், உலக வழக்கு மண்ணில் புதைவது உறுதி.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
அரம் போன்ற கூர்மையான அறிவுடையவர் ஆனாலும் மக்களுக்குரிய பண்பு இல்லை எனில் உணர்வற்ற மரமாகக் கருதப் படுவர்.
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
நட்புடன் பழகாமல், தீமை செய்பவர் ஆனாலும் அவரிடம் பண்புடன் நடவாமை இழிவானது.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
சிரித்து, மகிழ்ந்து பழகாதவர்களுக்கு பெரிய உலகம் பகல் பொழுதிலும் இருண்டு காணப் படும்.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம், தூய பால் கொண்ட பாத்திரத்தின் தூய்மையற்ற தன்மையால் திரிந்தது போல் கெட்டுப் போகும்.
பண்புடைமை என்னும் வழக்கு.
அணுகுவதற்கு எளியவராயிருந்தால் யாவரும் பண்புடைமை என்னும் பண்பை எளிதில் பெற்றிடலாம்.
எண்பதம் - எளியவராய் இருத்தல்
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
நல்ல குடியில் பிறத்தலும், அன்புடன் பழகுவதும் பண்புடைமை எனப்படும்.
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
மனித உறுப்புகள் ஒத்திருப்பதால் மட்டும் ஒருவர் மனிதர் ஆக மாட்டார். நற்பண்புகள் ஒத்திருப்பதால் ஒருவர் மனிதர் எனப்படுவார்.
வெறுத்தக்க - நெருங்கத் தக்க
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
நீதி வழுவாமல் நன்மை செய்யும் பயனுடையவரின் பண்பை உலகம் பாராட்டும்.
நயன் - நீதி
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
சிரித்து மகிழும் பொழுதும் இகழ்வது துன்பம் தருவதாகும். ஆதலால் பண்பாளர்கள் பகைவரிடமும் பண்புடன் நடந்து கொள்வார்கள்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
பண்புடையவர்கள் இருப்பதால் இவ்வுலகம் உயிர்ப்போடு இருக்கிறது. இல்லையெனில், உலக வழக்கு மண்ணில் புதைவது உறுதி.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
அரம் போன்ற கூர்மையான அறிவுடையவர் ஆனாலும் மக்களுக்குரிய பண்பு இல்லை எனில் உணர்வற்ற மரமாகக் கருதப் படுவர்.
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
நட்புடன் பழகாமல், தீமை செய்பவர் ஆனாலும் அவரிடம் பண்புடன் நடவாமை இழிவானது.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
சிரித்து, மகிழ்ந்து பழகாதவர்களுக்கு பெரிய உலகம் பகல் பொழுதிலும் இருண்டு காணப் படும்.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம், தூய பால் கொண்ட பாத்திரத்தின் தூய்மையற்ற தன்மையால் திரிந்தது போல் கெட்டுப் போகும்.
Labels:
ஒழிபியல்,
திருக்குறள்,
பண்புடைமை,
பொருட்பால்
பொருட்பால் - ஒழிபியல் - சான்றாண்மை - 99
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
தமது கடமைகளை உணர்ந்த பெருந்தன்மையாளர்கள் நல்ல செயல்கள் எல்லாம் தம் கடமை எனக் கொள்வர்.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
சான்றோர் நலம் என்பது நல்ல குணங்களினால் ஆனவை. அதைத் தவிர பிற நலன்கள் எவ்வகை நலன்களாகவும் கருத இடம் இல்லை.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
அன்புடன் பழகுதல், பழிக்கு வெட்குதல், ஒற்றுமையாய் இருத்தல், பிற உயிர்களிடம் இரங்கும் தன்மை, வாய்மை ஆகிய ஐந்தும் மேன்மையின் தூண்களாகும்.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
பிற உயிர்களை கொல்லாமை நோன்பு ஆகும்; பிறர் குறைகளை வேண்டுமென்று கூறாதிருத்தல் மேன்மை ஆகும்.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
செய்து முடிக்கக் கூடியவர்களால் பணிதல் என்னும் செயல் இயலும். அதை சான்றோர் மாற்றாரையும் நம் பக்கம் மாற்றும் கருவியாக பயன்படுத்துவர்.
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
ஒப்புமை இல்லாதவர்களிடமும் தம் தோல்வியை ஏற்றுக் கொள்வது மேன்மையின் தன்மை அறிய உரைகல் ஆகும்.
துலையார் - தமக்கு ஒப்பில்லாதவர், தம்மிலும் தாழ்ந்தவர்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
தமக்கு தீமை செய்தவருக்கும் நன்மை செய்ய இயலவில்லை என்றால் மேன்மையால் என்ன பயன்?
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.
மேன்மை குணம் ஒருவருக்கு அமைந்து விட்டால் பொருள் இல்லாதிருத்தல் ஒருவருக்கு இழிவு இல்லை.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
உலகமே அழியும் ஊழி ஏற்பட்டாலும் தம் நிலையில் இருந்து வழுவாதவர் மேன்மையின் உறைவிடமாகத் திகழ்வர்.
ஊழி - உலகம் நீரில் அழிழ்தல்
ஆழி - கடல்
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
சான்றான்மை மிக்கவர் தன் பண்பில் இருந்து விலகினால் இந்த நிலத்தால் சுமையைத் தாங்க இயலாது.
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
தமது கடமைகளை உணர்ந்த பெருந்தன்மையாளர்கள் நல்ல செயல்கள் எல்லாம் தம் கடமை எனக் கொள்வர்.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
சான்றோர் நலம் என்பது நல்ல குணங்களினால் ஆனவை. அதைத் தவிர பிற நலன்கள் எவ்வகை நலன்களாகவும் கருத இடம் இல்லை.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
அன்புடன் பழகுதல், பழிக்கு வெட்குதல், ஒற்றுமையாய் இருத்தல், பிற உயிர்களிடம் இரங்கும் தன்மை, வாய்மை ஆகிய ஐந்தும் மேன்மையின் தூண்களாகும்.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
பிற உயிர்களை கொல்லாமை நோன்பு ஆகும்; பிறர் குறைகளை வேண்டுமென்று கூறாதிருத்தல் மேன்மை ஆகும்.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
செய்து முடிக்கக் கூடியவர்களால் பணிதல் என்னும் செயல் இயலும். அதை சான்றோர் மாற்றாரையும் நம் பக்கம் மாற்றும் கருவியாக பயன்படுத்துவர்.
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
ஒப்புமை இல்லாதவர்களிடமும் தம் தோல்வியை ஏற்றுக் கொள்வது மேன்மையின் தன்மை அறிய உரைகல் ஆகும்.
துலையார் - தமக்கு ஒப்பில்லாதவர், தம்மிலும் தாழ்ந்தவர்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
தமக்கு தீமை செய்தவருக்கும் நன்மை செய்ய இயலவில்லை என்றால் மேன்மையால் என்ன பயன்?
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.
மேன்மை குணம் ஒருவருக்கு அமைந்து விட்டால் பொருள் இல்லாதிருத்தல் ஒருவருக்கு இழிவு இல்லை.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
உலகமே அழியும் ஊழி ஏற்பட்டாலும் தம் நிலையில் இருந்து வழுவாதவர் மேன்மையின் உறைவிடமாகத் திகழ்வர்.
ஊழி - உலகம் நீரில் அழிழ்தல்
ஆழி - கடல்
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
சான்றான்மை மிக்கவர் தன் பண்பில் இருந்து விலகினால் இந்த நிலத்தால் சுமையைத் தாங்க இயலாது.
Labels:
ஒழிபியல்,
சான்றாண்மை,
திருக்குறள்,
பொருட்பால்
Thursday, November 15, 2007
பொருட்பால் - ஒழிபியல் - பெருமை - 98
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
ஊக்கம் மிகுதியாக இருப்பது ஒருவருக்கு புகழைத் தரும். அவ்வாறு ஊக்கம் இல்லாமல் உயிர் வாழலாம் என்பது இழிவே.
ஒளி - புகழ்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
பிறப்பால் எல்லா உயிர்களும் ஒன்றே. ஆனால் சிறப்பு அவரவர் செய்யும் செயல்களால் வேறுபடும்.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
மேன்மையான குடியில் பிறந்தாலும் மேன்மையான செயல்களை செய்யாதவர்கள் மேன்மக்கள் ஆக மாட்டார்கள். கீழான குடியில் பிறந்தாலும் கீழ்மையான செயலைச் செய்யாதவர்கள் கீழ்மக்கள் இல்லை.
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
தன் மனதை சிதறவிடாத மகளிரைப் போல் சிறுமையில் இருந்து தன்னை காத்துக் கொண்டு வாழ்பவனும் பெருமைக்கு உரியவனே.
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
பெருமை உடையவர்கள் செய்வதற்கரிய செயல்களை செய்யும் வழி அறிந்து செய்வர்.
ஆற்றுதல் - செய்தல்
ஆறு - வழி
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்
கொள்வேம் என்னும் நோக்கு.
சிறுமை நிறைந்தவர்கள் செயலால், பண்பால் பெரியவர்கள் உடன் இருந்து அப்பண்புகளை கொள்வோம் என்னும் நோக்கம் இல்லாதவர்கள்.
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
சிறுமை உடையவர்கள் சிறப்பினைப் பெற்றால் அளவு மீறி செயல்படுவர்.
இறப்பு - மிகுதி
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமை உடையவர்கள் அதற்கு பணிவும் காரணம் என பணிந்திருப்பர். சிறுமை குணத்தை உடையவர்கள் தம்மை வியந்து இருப்பார்கள்.
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
காரணம் இருந்தும் பெருமிதம் இல்லாமல் இருப்பதே பெருமைக்கான குணம். காரணமின்றியும் பெருமிதம் கொள்பவர்கள் சிறியோராக இருப்பர்.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
பெருமை உடையவர்கள் பிறரின் குறைகளை விடுத்து அருமைகளைக் கூறுவர். சிறியோர் குறைகளையே கூறுவர்.
அற்றம் - கெடுதல், குறைகள்
அஃதிறந்து வாழ்தும் எனல்.
ஊக்கம் மிகுதியாக இருப்பது ஒருவருக்கு புகழைத் தரும். அவ்வாறு ஊக்கம் இல்லாமல் உயிர் வாழலாம் என்பது இழிவே.
ஒளி - புகழ்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
பிறப்பால் எல்லா உயிர்களும் ஒன்றே. ஆனால் சிறப்பு அவரவர் செய்யும் செயல்களால் வேறுபடும்.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
மேன்மையான குடியில் பிறந்தாலும் மேன்மையான செயல்களை செய்யாதவர்கள் மேன்மக்கள் ஆக மாட்டார்கள். கீழான குடியில் பிறந்தாலும் கீழ்மையான செயலைச் செய்யாதவர்கள் கீழ்மக்கள் இல்லை.
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
தன் மனதை சிதறவிடாத மகளிரைப் போல் சிறுமையில் இருந்து தன்னை காத்துக் கொண்டு வாழ்பவனும் பெருமைக்கு உரியவனே.
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
பெருமை உடையவர்கள் செய்வதற்கரிய செயல்களை செய்யும் வழி அறிந்து செய்வர்.
ஆற்றுதல் - செய்தல்
ஆறு - வழி
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்
கொள்வேம் என்னும் நோக்கு.
சிறுமை நிறைந்தவர்கள் செயலால், பண்பால் பெரியவர்கள் உடன் இருந்து அப்பண்புகளை கொள்வோம் என்னும் நோக்கம் இல்லாதவர்கள்.
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
சிறுமை உடையவர்கள் சிறப்பினைப் பெற்றால் அளவு மீறி செயல்படுவர்.
இறப்பு - மிகுதி
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமை உடையவர்கள் அதற்கு பணிவும் காரணம் என பணிந்திருப்பர். சிறுமை குணத்தை உடையவர்கள் தம்மை வியந்து இருப்பார்கள்.
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
காரணம் இருந்தும் பெருமிதம் இல்லாமல் இருப்பதே பெருமைக்கான குணம். காரணமின்றியும் பெருமிதம் கொள்பவர்கள் சிறியோராக இருப்பர்.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
பெருமை உடையவர்கள் பிறரின் குறைகளை விடுத்து அருமைகளைக் கூறுவர். சிறியோர் குறைகளையே கூறுவர்.
அற்றம் - கெடுதல், குறைகள்
பொருட்பால் - ஒழிபியல் - மானம் - 97
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
இன்றி அமையாத சிறப்புகளைத் தரும் ஆயினும் தம் குடிபெருமை குறைக்கும் செயல்களை கைவிட வேண்டும்.
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
புகழோடு கூடிய மானம் நிலைப்பதை விரும்புபவர்கள் தமக்குப் புகழ் வருமாயினும் தம் குடிப்பெருமை குன்றும் செயல்களைச் நெய்ய மாட்டார்கள்.
பேரான்மை - மானம்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
தம் வளம் பெரியதான பொழுது பணிவும், குன்றிய பொழுதில் மானத்தை உயர்வாகவும் கொள்ள வேண்டும்.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
தம் நிலையில் இருந்து தவறி இழி செயல் புரிந்தவர்கள் தலையில் இருந்து உதிர்ந்த மயிருக்கு ஒப்பாவர்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
குன்று போல் நிலையான புகழ் உடையவர் ஆனாலும், தம் குடிப் பெருமை குன்றும் படி சிறிதளவு தவறு செய்தாலும் தம் நிலையில் குறைந்திடுவர்.
குன்று - சிறிய மலை
குன்றுதல் - குறைதல்
குன்றி அனைய - குன்றி மணி அளவு - நுண்ணிய அளவு
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
தம்மை இகழ்ந்தவர் பின் செல்லுதலால் ஒருவருக்கு புகழ் கிடைக்காது; கடவுளர் உலகமும் வாய்க்காது. பின் அத்தகைய செயலால் என்ன பயன்?
புத்தேள் நாடு - கடவுளர் உலகம்.
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
தம்முடன் ஒட்டாதவரிடம் சென்று அவர் அருளால் வாழும் நிலை ஒருவன் இறந்தான் என கூறத் தக்கது.
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
வலிமையான பெருங்குடிப் பிறந்தவர்கள் தம் நிலை அழிய உடல் காக்கும் வாழ்க்கை எதற்கு உதவும்?
பீடு - வலிமை
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
தன் மயிர் உதிர உயிர் நீக்கும் கவரிமான்; மானத்துக்கு இழுக்கு வந்தால் உயிர் துறப்பவரும் அத்தகையோரே.
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
தமக்கு இழிவு வந்தால் உயிர் துறக்கும் மானம் உடையவரை இந்த உலகு வழிகாட்டியாகப் போற்றும்.
குன்ற வருப விடல்.
இன்றி அமையாத சிறப்புகளைத் தரும் ஆயினும் தம் குடிபெருமை குறைக்கும் செயல்களை கைவிட வேண்டும்.
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
புகழோடு கூடிய மானம் நிலைப்பதை விரும்புபவர்கள் தமக்குப் புகழ் வருமாயினும் தம் குடிப்பெருமை குன்றும் செயல்களைச் நெய்ய மாட்டார்கள்.
பேரான்மை - மானம்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
தம் வளம் பெரியதான பொழுது பணிவும், குன்றிய பொழுதில் மானத்தை உயர்வாகவும் கொள்ள வேண்டும்.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
தம் நிலையில் இருந்து தவறி இழி செயல் புரிந்தவர்கள் தலையில் இருந்து உதிர்ந்த மயிருக்கு ஒப்பாவர்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
குன்று போல் நிலையான புகழ் உடையவர் ஆனாலும், தம் குடிப் பெருமை குன்றும் படி சிறிதளவு தவறு செய்தாலும் தம் நிலையில் குறைந்திடுவர்.
குன்று - சிறிய மலை
குன்றுதல் - குறைதல்
குன்றி அனைய - குன்றி மணி அளவு - நுண்ணிய அளவு
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
தம்மை இகழ்ந்தவர் பின் செல்லுதலால் ஒருவருக்கு புகழ் கிடைக்காது; கடவுளர் உலகமும் வாய்க்காது. பின் அத்தகைய செயலால் என்ன பயன்?
புத்தேள் நாடு - கடவுளர் உலகம்.
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
தம்முடன் ஒட்டாதவரிடம் சென்று அவர் அருளால் வாழும் நிலை ஒருவன் இறந்தான் என கூறத் தக்கது.
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
வலிமையான பெருங்குடிப் பிறந்தவர்கள் தம் நிலை அழிய உடல் காக்கும் வாழ்க்கை எதற்கு உதவும்?
பீடு - வலிமை
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
தன் மயிர் உதிர உயிர் நீக்கும் கவரிமான்; மானத்துக்கு இழுக்கு வந்தால் உயிர் துறப்பவரும் அத்தகையோரே.
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
தமக்கு இழிவு வந்தால் உயிர் துறக்கும் மானம் உடையவரை இந்த உலகு வழிகாட்டியாகப் போற்றும்.
பொருட்பால் - ஒழிபியல் - குடிமை -96
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடத்து இயல்பாகவே ஒழுங்கும், பழிக்கு அஞ்சும் குணமும் இருக்கும்.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
நல்ல குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கமும், உண்மையும், பழிக்கு அஞ்சும் இயல்பும் தவற மாட்டார்கள்.
இழுக்கு - தவறுதல்
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
புன்சிரிப்பு, உதவும் பண்பு, இனியன பேசுதல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கு குணங்களும் வாய்மை தவறாத குடிப் பிறந்தவருக்குரியது.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
கோடிக் கோடிப் பொருள் தந்தாலும் நல்ல குடியில் பிறந்தவர்கள் தம் குடிப் பெருமை குன்றும் செயலைச் செய்ய மாட்டார்கள்.
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
பிறருக்கு கொடுத்து உதவுவதால் பொருள் நிலையில் குறைந்த போதும் நெடிய குடிப்பிறந்தவர் தம் பண்பில் தவற மாட்டார்கள்.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்.
குற்றமற்ற குலத்தில் வாழ்வதாக கருதுவோர் வஞ்சனையின் காரணமாக மேன்மை இல்லாத செயல் செய்ய மாட்டார்கள்.
சலம் - வஞ்சனை
சால்பு - மேன்மை
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
வான் நிலவின் களங்கம் போல் நல்ல குடியில் பிறந்தவர் செய்யும் தவறு தெளிவாகத் தெரியும்.
விசும்பு - வானம்
மறு - களங்கம்
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
நல்ல குடிப் பிறந்தவன் அன்பில்லாது இருந்தால் அவன் நல்ல குடிப் பிறந்தவனா என உலகத்தார் ஐயுறுவர்.
நார் - அன்பு
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் வளத்தை துளிர்க்கும் முளை காட்டும்; நல்ல குலத்தில் பிறந்தவனா என்பதை ஒருவன் பேசும் சொல் காட்டிவிடும்.
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
தனது நன்மை கருதுபவன் பிறர் பழிக்கும் செயலுக்கு அஞ்ச வேண்டும். நல்ல குடியில் விளங்க வேண்டும் என்றால் அனைவரிடமும் பணிவு வேண்டும்.
செப்பமும் நாணும் ஒருங்கு.
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடத்து இயல்பாகவே ஒழுங்கும், பழிக்கு அஞ்சும் குணமும் இருக்கும்.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
நல்ல குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கமும், உண்மையும், பழிக்கு அஞ்சும் இயல்பும் தவற மாட்டார்கள்.
இழுக்கு - தவறுதல்
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
புன்சிரிப்பு, உதவும் பண்பு, இனியன பேசுதல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கு குணங்களும் வாய்மை தவறாத குடிப் பிறந்தவருக்குரியது.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
கோடிக் கோடிப் பொருள் தந்தாலும் நல்ல குடியில் பிறந்தவர்கள் தம் குடிப் பெருமை குன்றும் செயலைச் செய்ய மாட்டார்கள்.
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
பிறருக்கு கொடுத்து உதவுவதால் பொருள் நிலையில் குறைந்த போதும் நெடிய குடிப்பிறந்தவர் தம் பண்பில் தவற மாட்டார்கள்.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்.
குற்றமற்ற குலத்தில் வாழ்வதாக கருதுவோர் வஞ்சனையின் காரணமாக மேன்மை இல்லாத செயல் செய்ய மாட்டார்கள்.
சலம் - வஞ்சனை
சால்பு - மேன்மை
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
வான் நிலவின் களங்கம் போல் நல்ல குடியில் பிறந்தவர் செய்யும் தவறு தெளிவாகத் தெரியும்.
விசும்பு - வானம்
மறு - களங்கம்
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
நல்ல குடிப் பிறந்தவன் அன்பில்லாது இருந்தால் அவன் நல்ல குடிப் பிறந்தவனா என உலகத்தார் ஐயுறுவர்.
நார் - அன்பு
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் வளத்தை துளிர்க்கும் முளை காட்டும்; நல்ல குலத்தில் பிறந்தவனா என்பதை ஒருவன் பேசும் சொல் காட்டிவிடும்.
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
தனது நன்மை கருதுபவன் பிறர் பழிக்கும் செயலுக்கு அஞ்ச வேண்டும். நல்ல குடியில் விளங்க வேண்டும் என்றால் அனைவரிடமும் பணிவு வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)