இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
துன்பம் வரும் போது அடுத்து வருவது நன்மை என்பதால் மகிழ்வு
கொள்ள வேண்டும்.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
வெள்ளமெனத் துன்பம் வந்த போதும் அறிவுடையவன் தீர்க்கும் வழி
நினைத்ததும் தீரும்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
துன்பத்திற்கு துன்பம் ஏற்படுத்தக்கூடியவர் துன்பம் வந்தால் வருந்தாதவர்
ஆவார்.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
இடர்பாடுகளை கடந்து செல்லும் எருதினைப் போன்ற ஊக்கம் உடையவனை அடையும் துன்பம் தானே இடையூறை எதிர் கொள்ளும்.
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
தொடர்ந்து துன்பம் வந்தாலும் குன்றாத உறுதியுடன் எதிர் கொள்பவனிடம் துன்பம் துன்பப் படும்.
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
பெற்ற செல்வத்தைக் எவருக்கும் ஈயாமல் காக்க எண்ணாதவர், பொருள் இல்லாத போது வருந்த மாட்டார்.
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
துன்பத்தின் இலக்கு உடம்பு என்பதை உணர்ந்தவர்கள் துன்பத்தில் கலங்காது இருப்பர்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
இன்பத்தை வேண்டாமல், துன்பமும் இயல்பானது எனக் கொள்பவனை துன்பம் வருத்துவது இல்லை.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
இன்பம் வந்தாலும் விரும்பாதவன் துன்பம் வந்தாலும் துன்புறுவது இல்லை.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
துன்பத்தையும் இன்பம் எனப் போற்றுபவனை பகைவரும் விரும்பும் சிறப்பை அடைவார்கள்.
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Friday, November 09, 2007
பொருட்பால் - அரசியல் - ஆள்வினை - உடைமை - 62
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
நம்மால் இயலாத செயல் என்று தளராமல் முயற்சி செய்தால் அது செயலுக்கான உறுதியைத் தரும்.
அசாவாமை - அசராமல்
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
செயலாற்ற வேண்டிய இடத்தில் செயலற்று இருத்தலை ஒழித்தல் வேண்டும். அவ்வாறின்றி செயலை முடிக்காமல் விட்டவரை உலகம் கருதாது.
ஓம்பல் - ஒழித்தல்
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
முயற்சிக்கும் பண்பு உடையவரிடம் உதவுதல் என்னும் பெருமை தங்கும்.
தாள் - முயற்சி
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
முயற்சி இல்லாதவர் செய்யக் கூடிய உதவி வீரமற்ற பேடி வாள் வீசும் தன்மை போல் பயனில்லாதது.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
இன்பத்தை நாடாமல் தன் செயலிலே கருத்தாக உள்ளவன் தன் சுற்றத்தாரின் துன்பம் துடைத்து தாங்கும் தூணாக இருப்பான்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
முயற்சி செல்வத்தை சேர்க்கும் வழி; முயலாமை இல்லாமையை (வறுமையை) ஏற்படுத்தும்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
சோம்பல் உடையவனிடம் மூதேவி குடியிருப்பாள்; சோம்பலை ஒழித்து முயற்ச்சிப்பவனிடம் தாமரை மலரில் இருப்பவள் (திருமகள்) தங்குவாள்.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
விதிப் பயன் இல்லாததது எவருக்கும் பழி இல்லை. அறிவினால் அறிந்து செய்யும் செயல் இன்றி இருப்பது பழித்தலுக்கு உரியது.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
இறைவனால் இயலாதது எனினும் தன் உடல் வருத்தி செய்யும் முயற்சி நன்மை தரும்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
மனம் தளராமல் முயற்சி செய்பவர் விதியையும் புறங்காணச் செய்வர்.
பெருமை முயற்சி தரும்.
நம்மால் இயலாத செயல் என்று தளராமல் முயற்சி செய்தால் அது செயலுக்கான உறுதியைத் தரும்.
அசாவாமை - அசராமல்
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
செயலாற்ற வேண்டிய இடத்தில் செயலற்று இருத்தலை ஒழித்தல் வேண்டும். அவ்வாறின்றி செயலை முடிக்காமல் விட்டவரை உலகம் கருதாது.
ஓம்பல் - ஒழித்தல்
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
முயற்சிக்கும் பண்பு உடையவரிடம் உதவுதல் என்னும் பெருமை தங்கும்.
தாள் - முயற்சி
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
முயற்சி இல்லாதவர் செய்யக் கூடிய உதவி வீரமற்ற பேடி வாள் வீசும் தன்மை போல் பயனில்லாதது.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
இன்பத்தை நாடாமல் தன் செயலிலே கருத்தாக உள்ளவன் தன் சுற்றத்தாரின் துன்பம் துடைத்து தாங்கும் தூணாக இருப்பான்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
முயற்சி செல்வத்தை சேர்க்கும் வழி; முயலாமை இல்லாமையை (வறுமையை) ஏற்படுத்தும்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
சோம்பல் உடையவனிடம் மூதேவி குடியிருப்பாள்; சோம்பலை ஒழித்து முயற்ச்சிப்பவனிடம் தாமரை மலரில் இருப்பவள் (திருமகள்) தங்குவாள்.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
விதிப் பயன் இல்லாததது எவருக்கும் பழி இல்லை. அறிவினால் அறிந்து செய்யும் செயல் இன்றி இருப்பது பழித்தலுக்கு உரியது.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
இறைவனால் இயலாதது எனினும் தன் உடல் வருத்தி செய்யும் முயற்சி நன்மை தரும்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
மனம் தளராமல் முயற்சி செய்பவர் விதியையும் புறங்காணச் செய்வர்.
Labels:
அரசியல்,
ஆள்வினை உடைமை,
திருக்குறள்,
பொருட்பால்
பொருட்பால் - அரசியல் - மடியின்மை - 61
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
குடிப்பெருமை என்னும் விளக்கு சோம்பலினால் இருண்டு ஒளி குன்றும்.
மடி - சோம்பல்
மாசூர - மாசு ஊர
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
தன் குடி நற்குடியாக விளங்க வேண்டுவோர் சோம்பலை விட்டொழிக்க வேண்டும்.
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
சோம்பலை விடது ஒழுகும் அறிவற்றவனின் குடி அவனுக்கு முனபாக அழியும்.
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
சோம்பலில் வீழ்ந்ததால் சிறந்த தூண்டுதல் இழந்தவர்களின் குடி மடிந்து குற்றம் பெருகும்.
மாண்ட - சிறந்த
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெடும் தன்மையுடையவர் விரும்பியேறும் தோணி ஆகும்.
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
நாடு ஆள்பவரின் செல்வம் அமைந்தாலும் சோம்பல் உடையவர் அதனால் விளையும் பயனை அடைய முடியாது.
இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
சோம்பல் விரும்பி சிறந்த ஊக்கத்தை இழந்தவர்கள் அதனால் பிறர் கடிந்தும், இகழ்ந்தும் கூறும் சொற்களைக் கேட்பர்.
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
சோம்பல் ஒரு குடியில் தங்கினால் அக்குடியை பகைவருக்கு அடிமையாக்கி வடும்.
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
ஒருவன் தன் சோம்பலை விட்டொழித்தால் அவன் குடிக்கு நேர்ந்த குற்றம் நீங்கும்.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
சோம்பல் இல்லாத மன்னன் கால் அளந்த இடமெல்லாம் ஒருங்கே ஆளப் பெறுவான்.
மாசூர மாய்ந்து கெடும்.
குடிப்பெருமை என்னும் விளக்கு சோம்பலினால் இருண்டு ஒளி குன்றும்.
மடி - சோம்பல்
மாசூர - மாசு ஊர
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
தன் குடி நற்குடியாக விளங்க வேண்டுவோர் சோம்பலை விட்டொழிக்க வேண்டும்.
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
சோம்பலை விடது ஒழுகும் அறிவற்றவனின் குடி அவனுக்கு முனபாக அழியும்.
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
சோம்பலில் வீழ்ந்ததால் சிறந்த தூண்டுதல் இழந்தவர்களின் குடி மடிந்து குற்றம் பெருகும்.
மாண்ட - சிறந்த
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெடும் தன்மையுடையவர் விரும்பியேறும் தோணி ஆகும்.
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
நாடு ஆள்பவரின் செல்வம் அமைந்தாலும் சோம்பல் உடையவர் அதனால் விளையும் பயனை அடைய முடியாது.
இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
சோம்பல் விரும்பி சிறந்த ஊக்கத்தை இழந்தவர்கள் அதனால் பிறர் கடிந்தும், இகழ்ந்தும் கூறும் சொற்களைக் கேட்பர்.
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
சோம்பல் ஒரு குடியில் தங்கினால் அக்குடியை பகைவருக்கு அடிமையாக்கி வடும்.
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
ஒருவன் தன் சோம்பலை விட்டொழித்தால் அவன் குடிக்கு நேர்ந்த குற்றம் நீங்கும்.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
சோம்பல் இல்லாத மன்னன் கால் அளந்த இடமெல்லாம் ஒருங்கே ஆளப் பெறுவான்.
பொருட்பால் - அரசியல் - ஊக்கமுடைமை - 60
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
ஊக்கம் உடையவர் அனைத்தும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் எவை உடையவரானாலும் இல்லாதவரே.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
ஊக்கம் உடைமையே நிலையான உடைமை ஆகும். பொருள் உடைமை நீங்கும் தன்மை உடையது.
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
உறுதியான ஊக்கத்தை தம் கைப்பொருளாகக் கொண்டவர், தம் செல்வத்தை இழந்தோம் என்று கவலை கொள்ள மாட்டார்கள்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
அசையாத ஊக்கத்தை உடையவனிடத்திற்கு செல்வம் வழி கேட்டுச் செல்லும்.
அதர் - வழி
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நீரின் ஆழத்திற்கேற்ப மலர் தாளின் உயரம் அமையும், மாந்தருக்கு உள்ளத்து ஊக்கத்தால் உயர்வு அமையும்.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
உயர்வான சிந்தனையையே எண்ண வேண்டும். அவ்வெண்ணம் கை கூடவில்லை எனினும் நீங்காத தன்மை உடையது.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
அம்பினால் புண் பட்டாலும் உறுதி குன்றாமல் யானை தன் புகழை நிலை நிறுத்துவது போல் தம் எண்ணத்திற்கு சிதைவு வந்தாலும் ஊக்கம் உடையவர் தளராமல் இருப்பர்.
ஒல்கார் - தளராதவர்
உரவோர் - ஊக்கமுடையோர்
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
ஊக்கம் இல்லாதவர் தாம் வலிமையுடையவர் என்னும் நம்பிக்கை அமையதவராய் இருப்பார்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
உடலால் பெரியது, கூரிய கொம்புகளை உடையது ஆனாலும் யானை புலியால் தாக்கப்ப்பட்டால் வெருளும்.
பரியது - பெரியது
கோட்டு - கொம்பு
வெரூஉம் - வெருளும்
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
ஊக்கம் மிகுந்திருத்தலே ஒருவருக்கு உறுதியைத் தரும். ஊக்கம் இல்லாதவர் மனித உருவில் இருக்கும் மரங்களாவர்.
வெறுக்கை - மிகுதி
உடையது உடையரோ மற்று.
ஊக்கம் உடையவர் அனைத்தும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் எவை உடையவரானாலும் இல்லாதவரே.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
ஊக்கம் உடைமையே நிலையான உடைமை ஆகும். பொருள் உடைமை நீங்கும் தன்மை உடையது.
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
உறுதியான ஊக்கத்தை தம் கைப்பொருளாகக் கொண்டவர், தம் செல்வத்தை இழந்தோம் என்று கவலை கொள்ள மாட்டார்கள்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
அசையாத ஊக்கத்தை உடையவனிடத்திற்கு செல்வம் வழி கேட்டுச் செல்லும்.
அதர் - வழி
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நீரின் ஆழத்திற்கேற்ப மலர் தாளின் உயரம் அமையும், மாந்தருக்கு உள்ளத்து ஊக்கத்தால் உயர்வு அமையும்.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
உயர்வான சிந்தனையையே எண்ண வேண்டும். அவ்வெண்ணம் கை கூடவில்லை எனினும் நீங்காத தன்மை உடையது.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
அம்பினால் புண் பட்டாலும் உறுதி குன்றாமல் யானை தன் புகழை நிலை நிறுத்துவது போல் தம் எண்ணத்திற்கு சிதைவு வந்தாலும் ஊக்கம் உடையவர் தளராமல் இருப்பர்.
ஒல்கார் - தளராதவர்
உரவோர் - ஊக்கமுடையோர்
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
ஊக்கம் இல்லாதவர் தாம் வலிமையுடையவர் என்னும் நம்பிக்கை அமையதவராய் இருப்பார்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
உடலால் பெரியது, கூரிய கொம்புகளை உடையது ஆனாலும் யானை புலியால் தாக்கப்ப்பட்டால் வெருளும்.
பரியது - பெரியது
கோட்டு - கொம்பு
வெரூஉம் - வெருளும்
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
ஊக்கம் மிகுந்திருத்தலே ஒருவருக்கு உறுதியைத் தரும். ஊக்கம் இல்லாதவர் மனித உருவில் இருக்கும் மரங்களாவர்.
வெறுக்கை - மிகுதி
Labels:
அரசியல்,
ஊக்கமுடைமை,
திருக்குறள்,
பொருட்பால்
பொருட்பால் - அரசியல் - ஒற்றாடல் - 59
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
ஒற்றறிதல், நூல் உரைக்கும் நீதி இரண்டிலும் மன்னன் தெளிந்த தேர்ச்சி உடையவனாய் இருத்தல் வேண்டும்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நாள் தோறும் ஒற்றர் மூலம் அறிந்திருப்பது வேந்தர் கடமை.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
ஒற்றறிந்து வரும் செய்தியின் பயன் தெரியாத மன்னன் வெற்றி காண்பது இல்லை.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
செயலாற்றுபவர், சுற்றத்தார், பகைவர் என்று பாராமல் அனைவரையும் ஆராய்வது ஒற்று எனப்படும்.
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
பிறர் ஐயுறாத உருவில், ஒற்றறியும் இடத்து சினத்தைக்கு அஞ்சாமல், எவ்வாற்றாகிலும் தன்னை வெளிப்படுத்தாமல் ஆராய்வதே ஒற்று.
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
பழிக்கஞ்சாது துறவி வேடமிட்டும், புக இயலாத இடத்திலும் புகுந்து எந்த துன்பம் வந்தாலும், தன்னை வெளிப் படுத்தாமல் ஆராய்வது ஒற்று.
இறந்த - புக இயலாத
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
மறைவாக நடப்பவற்றை அறிந்தவரிடம் இருந்து கேட்டு தான் அறிந்தவற்றை ஐயமில்லாமல் தெளிவதே ஒற்று.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
ஒற்றின் மூலமாக அறிந்தவற்றையும் தேவை இருந்தால் இன்னும் ஒரு ஒற்றறரால் ஒற்றறிந்து உண்மை தெளிதல் வேண்டும்.
ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
ஒரு ஒற்றனுக்குத் தெரியாமல் இன்னொருவன் ஒற்றறியும் படி செய்து, இது போல் மூவர் தரும் செய்தியால் உண்மை தெளிய வேண்டும்.
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
சிறப்பாக ஒற்றறிந்ததை பிறர் அறியுமாறு பாராட்டினால், மறைவான செய்தியை வெளிப்படுத்தியதாகும்; ஆகவே, தவிர்க்க வேண்டும்.
தெற்றென்க மன்னவன் கண்.
ஒற்றறிதல், நூல் உரைக்கும் நீதி இரண்டிலும் மன்னன் தெளிந்த தேர்ச்சி உடையவனாய் இருத்தல் வேண்டும்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நாள் தோறும் ஒற்றர் மூலம் அறிந்திருப்பது வேந்தர் கடமை.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
ஒற்றறிந்து வரும் செய்தியின் பயன் தெரியாத மன்னன் வெற்றி காண்பது இல்லை.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
செயலாற்றுபவர், சுற்றத்தார், பகைவர் என்று பாராமல் அனைவரையும் ஆராய்வது ஒற்று எனப்படும்.
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
பிறர் ஐயுறாத உருவில், ஒற்றறியும் இடத்து சினத்தைக்கு அஞ்சாமல், எவ்வாற்றாகிலும் தன்னை வெளிப்படுத்தாமல் ஆராய்வதே ஒற்று.
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
பழிக்கஞ்சாது துறவி வேடமிட்டும், புக இயலாத இடத்திலும் புகுந்து எந்த துன்பம் வந்தாலும், தன்னை வெளிப் படுத்தாமல் ஆராய்வது ஒற்று.
இறந்த - புக இயலாத
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
மறைவாக நடப்பவற்றை அறிந்தவரிடம் இருந்து கேட்டு தான் அறிந்தவற்றை ஐயமில்லாமல் தெளிவதே ஒற்று.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
ஒற்றின் மூலமாக அறிந்தவற்றையும் தேவை இருந்தால் இன்னும் ஒரு ஒற்றறரால் ஒற்றறிந்து உண்மை தெளிதல் வேண்டும்.
ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
ஒரு ஒற்றனுக்குத் தெரியாமல் இன்னொருவன் ஒற்றறியும் படி செய்து, இது போல் மூவர் தரும் செய்தியால் உண்மை தெளிய வேண்டும்.
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
சிறப்பாக ஒற்றறிந்ததை பிறர் அறியுமாறு பாராட்டினால், மறைவான செய்தியை வெளிப்படுத்தியதாகும்; ஆகவே, தவிர்க்க வேண்டும்.
பொருட்பால் - அரசியல் - கண்ணோட்டம் - 58
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
கண்ணோட்டம் (அன்பு, இரக்கம்) என்னும் சிறப்புடைய அழகு இருப்பதால் இந்த உலகம் இன்னும் இருக்கிறது.
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
இரங்குபவர்களால் ஆனது இந்த உலகம். இரக்கம் இல்லாதவர்கள் உண்மையில் நிலத்திற்கு சுமையே.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
பாடலுக்கு பண் இயைந்து வரவில்லை எனில் இசையால் பயன் இல்லை. அது போல் இரங்காதவருக்கு கண் இருந்து என்ன பயன்?
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
அளவோடு இரங்காதவருக்கு இருப்பது போல் தோன்றுவதைத் தவிர கண்ணால் ஆவது என்ன?
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
கண்ணிற்கு அணிகலன் போன்றதே கண்ணோட்டம்; கண்ணோட்டம் இல்லையெனில் கண்கள், புண்களாக கொள்ளப் படும்.
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
கண்ணோடு இயைந்த இரக்கம் இல்லாதவர்கள் மண்ணோடு அமைந்த மரத்திற்கு இணையாவர்.
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
இரங்குதல் தன்மை இல்லாதவர் கண் உடையவர் இல்லை; கண் உடையவர் இரங்காமல் இருப்பதுமில்லை.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
தான் கொண்ட கடமை தவறாது இரங்குபவர் இவுலகுக்கு உரிமை படைத்தவர் ஆவார்.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
தன்னை ஒறுத்தவரையும் இரக்கத்துடன் தவறைப் பொறுத்து இருப்பதே சிறந்தது.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
விரும்பத் தக்க நாகரிகம் வேண்டுபவர், தாம் விரும்புபவர் நஞ்சு தந்தாலும் அருந்துவர்.
உண்மையான் உண்டிவ் வுலகு.
கண்ணோட்டம் (அன்பு, இரக்கம்) என்னும் சிறப்புடைய அழகு இருப்பதால் இந்த உலகம் இன்னும் இருக்கிறது.
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
இரங்குபவர்களால் ஆனது இந்த உலகம். இரக்கம் இல்லாதவர்கள் உண்மையில் நிலத்திற்கு சுமையே.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
பாடலுக்கு பண் இயைந்து வரவில்லை எனில் இசையால் பயன் இல்லை. அது போல் இரங்காதவருக்கு கண் இருந்து என்ன பயன்?
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
அளவோடு இரங்காதவருக்கு இருப்பது போல் தோன்றுவதைத் தவிர கண்ணால் ஆவது என்ன?
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
கண்ணிற்கு அணிகலன் போன்றதே கண்ணோட்டம்; கண்ணோட்டம் இல்லையெனில் கண்கள், புண்களாக கொள்ளப் படும்.
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
கண்ணோடு இயைந்த இரக்கம் இல்லாதவர்கள் மண்ணோடு அமைந்த மரத்திற்கு இணையாவர்.
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
இரங்குதல் தன்மை இல்லாதவர் கண் உடையவர் இல்லை; கண் உடையவர் இரங்காமல் இருப்பதுமில்லை.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
தான் கொண்ட கடமை தவறாது இரங்குபவர் இவுலகுக்கு உரிமை படைத்தவர் ஆவார்.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
தன்னை ஒறுத்தவரையும் இரக்கத்துடன் தவறைப் பொறுத்து இருப்பதே சிறந்தது.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
விரும்பத் தக்க நாகரிகம் வேண்டுபவர், தாம் விரும்புபவர் நஞ்சு தந்தாலும் அருந்துவர்.
Labels:
அரசியல்,
கண்ணோட்டம்,
திருக்குறள்,
பொருட்பால்
பொருட்பால் - அரசியல் - வெருவந்த - செய்யாமை - 57
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
நடுநிலையுடன வழக்கை ஆராய்ந்து மீண்டும் தவறு நிகழா வண்ணம் தவறுக்கு ஏற்றவாறு ஒறுப்பது மன்னன் கடமை.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
ஆக்கம் நெடுங்காலம் வேண்டும் எனின் ஒருவருடைய தவறை அளவோடு கடிந்து, சினம் காட்ட வேண்டும்.
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
குடிமக்கள் அஞ்சும் செயலைச் செய்யும் கொடுங்கோல் மன்னன் விரைந்து கெடுவான் என்பது உறுதி.
வருவந்த - அஞ்சத் தக்க
ஒருவந்தம் - உறுதியாக
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
கடுமையானவன் என்று குடிகள் கூறுமளவு துன்பம் தரும் சொல் பேசும் மன்னன் ஆயுள் குறைந்து, தன் செல்வத்தை விரைவில் இழப்பான்.
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
எளிதில் அணுக முடியாமலும், கடுமையுடனும் காணப்படும் மன்னனின் பெருஞ்செல்வம் பேய் காக்கும் பொருள் போன்றது.
செவ்வி - காலம்
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
கடுஞ்சொல் பேசி, அன்பில்லாமல் நடந்து கொள்ளும் மன்னனின் செல்வம் நிலைத்திருக்காது.
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
கடுஞ்சொல் பேசுவதும், கடுமையாக ஒறுத்தலும் மன்னனின் பகை வெல்லும் வலிமையை தேய்க்கும் அரம் ஆகும்.
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
தன்னுடன் இருப்பவர்களை கலந்து ஆராயாமல் சினம் கொண்டு சீறும் மன்னனின் செல்வம் சிறுத்து விடும்.
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
தனக்கு வேண்டிய பாதுகாப்பை அமைத்துக் கொள்ளாத மன்னன் பகை வரும் போது அஞ்சி விரைவில் அழிவான்.
செரு - பகை
சிறை - காவல்
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
கல்லாதவரை உடன் வைத்திருக்கும் கடுங்கோல் மன்னன் போல் நிலத்திற்கு சுமை வேறு இல்லை.
பொறை - சுமை
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
நடுநிலையுடன வழக்கை ஆராய்ந்து மீண்டும் தவறு நிகழா வண்ணம் தவறுக்கு ஏற்றவாறு ஒறுப்பது மன்னன் கடமை.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
ஆக்கம் நெடுங்காலம் வேண்டும் எனின் ஒருவருடைய தவறை அளவோடு கடிந்து, சினம் காட்ட வேண்டும்.
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
குடிமக்கள் அஞ்சும் செயலைச் செய்யும் கொடுங்கோல் மன்னன் விரைந்து கெடுவான் என்பது உறுதி.
வருவந்த - அஞ்சத் தக்க
ஒருவந்தம் - உறுதியாக
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
கடுமையானவன் என்று குடிகள் கூறுமளவு துன்பம் தரும் சொல் பேசும் மன்னன் ஆயுள் குறைந்து, தன் செல்வத்தை விரைவில் இழப்பான்.
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
எளிதில் அணுக முடியாமலும், கடுமையுடனும் காணப்படும் மன்னனின் பெருஞ்செல்வம் பேய் காக்கும் பொருள் போன்றது.
செவ்வி - காலம்
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
கடுஞ்சொல் பேசி, அன்பில்லாமல் நடந்து கொள்ளும் மன்னனின் செல்வம் நிலைத்திருக்காது.
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
கடுஞ்சொல் பேசுவதும், கடுமையாக ஒறுத்தலும் மன்னனின் பகை வெல்லும் வலிமையை தேய்க்கும் அரம் ஆகும்.
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
தன்னுடன் இருப்பவர்களை கலந்து ஆராயாமல் சினம் கொண்டு சீறும் மன்னனின் செல்வம் சிறுத்து விடும்.
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
தனக்கு வேண்டிய பாதுகாப்பை அமைத்துக் கொள்ளாத மன்னன் பகை வரும் போது அஞ்சி விரைவில் அழிவான்.
செரு - பகை
சிறை - காவல்
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
கல்லாதவரை உடன் வைத்திருக்கும் கடுங்கோல் மன்னன் போல் நிலத்திற்கு சுமை வேறு இல்லை.
பொறை - சுமை
Labels:
அரசியல்,
திருக்குறள்,
பொருட்பால்,
வெருவந்த செய்யாமை
பொருட்பால் - அரசியல் - கொடுங்கோன்மை - 56
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
தன் குடிமக்களை அலைக்கழித்து, துன்பம் விளைவிக்கும் வேந்தன் செயல் கொலையயை விட கொடுமையானது.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
தன் குடிமக்களிடம் முறையின்றி பொருள் வேண்டும் மன்னன், வேல் கொண்டு வரும் கொள்ளையர் போன்றவன்.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
நாட்டில் உள்ள நிலையை ஆராய்ந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்காத மன்னன் நாடு சீர்குலைந்து அழியும்.
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
அறம் பற்றி எண்ணாமல் ஆளும் மன்னன் தன் செல்வத்தையும், குடி மக்களின் அன்பையும் ஒருங்கே இழப்பான்.
சூழாது - எண்ணாது
கூழ் - செல்வம்
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
துன்பத்தால், ஆற்ற இயலாத படி குடிமக்கள் விடும் கண்ணீர் பகைவரின் படை போல ஒரு மன்னனின் செல்வத்தை அழிக்கும்.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
செம்மையான ஆட்சியே மன்னனுக்கு நிலைத்த புகழைத் தரும். இல்லையெனில் மன்னருக்கு புகழ் நிலைக்காது.
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
மழையில்லாத்தால் நேரும் துன்பம் போன்றதே, அன்பில்லாத மன்னன் நாட்டில் வாழும் நிலை.
எற்று - எவ்வாறு
அற்று - அவ்வாறு
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
முறையற்ற ஆட்சியில் வாழும் குடிமக்களுக்கு பொருள் இன்மையால் விளையும் துன்பம் நேரும்.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
முறையற்ற செயல்களை மன்னன் செய்தால் வானம் பருவத்து பெய்யும் மழையைத் தராது.
உறை - பருவ மழை
ஒல்லாது - பொருந்தாது
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
காக்கும் கடமையை மன்னன் செய்யவில்லை என்றால் பசுக்களின் பயன் குன்றும், பல தொழில் செய்வோரும் கற்ற அறிவை மறப்பர். (நாட்டின் வளம் குன்றுவதால் பசுக்கள் தக்க உணவின்றி பால் தராது. பல தொழில் புரிவோரும் உணவு தேடி வேறு தொழில் செய்வதால் தம் தொழில் சார்ந்த அறிவினை இழப்பர்)
ஆ - பசு
அறுதொழிலோர் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈட்டல் முதலிய ஆறு தொழில்கள் செய்வோர்
அல்லவை செய்தொழுகும் வேந்து.
தன் குடிமக்களை அலைக்கழித்து, துன்பம் விளைவிக்கும் வேந்தன் செயல் கொலையயை விட கொடுமையானது.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
தன் குடிமக்களிடம் முறையின்றி பொருள் வேண்டும் மன்னன், வேல் கொண்டு வரும் கொள்ளையர் போன்றவன்.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
நாட்டில் உள்ள நிலையை ஆராய்ந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்காத மன்னன் நாடு சீர்குலைந்து அழியும்.
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
அறம் பற்றி எண்ணாமல் ஆளும் மன்னன் தன் செல்வத்தையும், குடி மக்களின் அன்பையும் ஒருங்கே இழப்பான்.
சூழாது - எண்ணாது
கூழ் - செல்வம்
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
துன்பத்தால், ஆற்ற இயலாத படி குடிமக்கள் விடும் கண்ணீர் பகைவரின் படை போல ஒரு மன்னனின் செல்வத்தை அழிக்கும்.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
செம்மையான ஆட்சியே மன்னனுக்கு நிலைத்த புகழைத் தரும். இல்லையெனில் மன்னருக்கு புகழ் நிலைக்காது.
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
மழையில்லாத்தால் நேரும் துன்பம் போன்றதே, அன்பில்லாத மன்னன் நாட்டில் வாழும் நிலை.
எற்று - எவ்வாறு
அற்று - அவ்வாறு
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
முறையற்ற ஆட்சியில் வாழும் குடிமக்களுக்கு பொருள் இன்மையால் விளையும் துன்பம் நேரும்.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
முறையற்ற செயல்களை மன்னன் செய்தால் வானம் பருவத்து பெய்யும் மழையைத் தராது.
உறை - பருவ மழை
ஒல்லாது - பொருந்தாது
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
காக்கும் கடமையை மன்னன் செய்யவில்லை என்றால் பசுக்களின் பயன் குன்றும், பல தொழில் செய்வோரும் கற்ற அறிவை மறப்பர். (நாட்டின் வளம் குன்றுவதால் பசுக்கள் தக்க உணவின்றி பால் தராது. பல தொழில் புரிவோரும் உணவு தேடி வேறு தொழில் செய்வதால் தம் தொழில் சார்ந்த அறிவினை இழப்பர்)
ஆ - பசு
அறுதொழிலோர் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈட்டல் முதலிய ஆறு தொழில்கள் செய்வோர்
Labels:
அரசியல்,
கொடுங்கோன்மை,
திருக்குறள்,
பொருட்பால்
Thursday, November 08, 2007
பொருட்பால் - அரசியல் - செங்கோன்மை - 55
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
வழக்கை ஆராய்ந்து ஒருபக்கம் சாராது நடுநிலையில் நூல் வகுத்த வழியில் நீதி வழங்க வேண்டும்.
கண்ணோடாது - இரக்கப் படாமல்
இறை புரிந்து - அனைவருக்கும் பொதுவாக, நடு நிலையில்
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.
உயிர் வாழ உதவும் மழை போல் ஒரு நாட்டின் குடிகளுக்கு மன்னன் ஆட்சி (அனைவருக்கும் பொதுவான பயன் வழங்குமாறு) அமைதல் வேண்டும்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
மன்னவன் ஆட்சி அந்தனர் கற்கும் அறத்திற்கும் மூலமானது.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
குடிகளை அரவணைத்து செல்லும் மன்னனின் அடிகளைப் பற்றி நிற்பர் மக்கள்.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
நூல் வகுத்த விதிகளின் படி ஆளும் மன்னன் நாட்டில் தவறாது பெய்யும் மழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்து அமையும்.
உளி - விதிமுறை
தொக்கு - சேர்ந்து, கூடி
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது வளையாத செங்கோல் அன்றி வேல் அல்ல.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
நாட்டை ஆளும் அரசனை அவன் வழுவாது ஆளும் முறை காக்கும்.
முட்டா - முட்டாது, தடை இல்லாமல்
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
அணுக எளிமையாக, நீதி ஆராய்ந்து முறை வழங்காத மன்னன் தன் நிலையில் தாழ்ந்து கெடுவான்.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
தன் குடிமக்களை பிற துன்பங்களில் இருந்து காத்து, தானும் வருத்தாமல், தவறைத் தண்டித்தல் மன்னனுக்கு பழியன்று; அவன் கடமையே ஆகும்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொடியவர்களை வேந்தன் தண்டித்தல், பயிர் வளர களை அகற்றுவதற்கு ஒப்பானது.
தேர்ந்துசெய் வஃதே முறை.
வழக்கை ஆராய்ந்து ஒருபக்கம் சாராது நடுநிலையில் நூல் வகுத்த வழியில் நீதி வழங்க வேண்டும்.
கண்ணோடாது - இரக்கப் படாமல்
இறை புரிந்து - அனைவருக்கும் பொதுவாக, நடு நிலையில்
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.
உயிர் வாழ உதவும் மழை போல் ஒரு நாட்டின் குடிகளுக்கு மன்னன் ஆட்சி (அனைவருக்கும் பொதுவான பயன் வழங்குமாறு) அமைதல் வேண்டும்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
மன்னவன் ஆட்சி அந்தனர் கற்கும் அறத்திற்கும் மூலமானது.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
குடிகளை அரவணைத்து செல்லும் மன்னனின் அடிகளைப் பற்றி நிற்பர் மக்கள்.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
நூல் வகுத்த விதிகளின் படி ஆளும் மன்னன் நாட்டில் தவறாது பெய்யும் மழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்து அமையும்.
உளி - விதிமுறை
தொக்கு - சேர்ந்து, கூடி
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது வளையாத செங்கோல் அன்றி வேல் அல்ல.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
நாட்டை ஆளும் அரசனை அவன் வழுவாது ஆளும் முறை காக்கும்.
முட்டா - முட்டாது, தடை இல்லாமல்
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
அணுக எளிமையாக, நீதி ஆராய்ந்து முறை வழங்காத மன்னன் தன் நிலையில் தாழ்ந்து கெடுவான்.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
தன் குடிமக்களை பிற துன்பங்களில் இருந்து காத்து, தானும் வருத்தாமல், தவறைத் தண்டித்தல் மன்னனுக்கு பழியன்று; அவன் கடமையே ஆகும்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொடியவர்களை வேந்தன் தண்டித்தல், பயிர் வளர களை அகற்றுவதற்கு ஒப்பானது.
Labels:
அரசியல்,
செங்கோன்மை,
திருக்குறள்,
பொருட்பால்
பொருட்பால் - அரசியல் - பொச்சாவாமை - 54
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
அடங்காத சினத்தை விட அளவு கடந்த மகிழ்ச்சியினால் வரும் மறதி தீங்கானது.
இறந்த - அடங்காத
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
நாளும் இரந்து உண்பவன் அறிவு அழிவது போல், மறதி ஒருவன் புகழை அழிக்கும்.
பொச்சாப்பு - மறதி
நிச்ச - நாள்தோறும்
நிரப்பு - இரந்து
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
மறதி உடையவருக்கு புகழ் கிடைக்காது என்பது உலகில் எவ்வகை நூல் கற்றவருக்கும் தெரியும்.
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
அஞ்சுபவருக்கு எவ்வகை காவலும் காப்பாக தோன்றாது. அதுபோல், மறதி உடையவருக்கு எவ்வகை நலமும் நலனாய் தோன்றாது.
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
துன்பம் வரும் முன் காக்க மறந்த பிழைக்கு துன்பத்தில் வருந்துவர்.
இழுக்கு - மறதி
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.
மறதி என்பது ஒருவருக்கு என்றும் இல்லையெனில் அதைப் போல் நன்மை ஒருவருக்கு இல்லை.
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
மறதியின்மையைக் கைக்கொண்டவருக்கு செய்வதற்கு அரியது என எதுவும் இல்லை.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
பிறரால் புகழப்படும் செயல்களை செய்ய மறந்தவருக்கு ஏழு பிறப்பும் நன்மை அமையாது.
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
தன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் போது மகிழுச்சியால் ஏற்பட்ட மறதியால் அழிந்தவர்களை நினைவில் கொள்ள வேண்டும்.
மைந்து - வலிமை
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
குறிக்கோளை மனதில் கொள்பவருக்கு, அதனை அடைதல் எளிதானது.
உள்ளியது - எண்ணியது, குறிக்கோள்
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
அடங்காத சினத்தை விட அளவு கடந்த மகிழ்ச்சியினால் வரும் மறதி தீங்கானது.
இறந்த - அடங்காத
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
நாளும் இரந்து உண்பவன் அறிவு அழிவது போல், மறதி ஒருவன் புகழை அழிக்கும்.
பொச்சாப்பு - மறதி
நிச்ச - நாள்தோறும்
நிரப்பு - இரந்து
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
மறதி உடையவருக்கு புகழ் கிடைக்காது என்பது உலகில் எவ்வகை நூல் கற்றவருக்கும் தெரியும்.
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
அஞ்சுபவருக்கு எவ்வகை காவலும் காப்பாக தோன்றாது. அதுபோல், மறதி உடையவருக்கு எவ்வகை நலமும் நலனாய் தோன்றாது.
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
துன்பம் வரும் முன் காக்க மறந்த பிழைக்கு துன்பத்தில் வருந்துவர்.
இழுக்கு - மறதி
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.
மறதி என்பது ஒருவருக்கு என்றும் இல்லையெனில் அதைப் போல் நன்மை ஒருவருக்கு இல்லை.
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
மறதியின்மையைக் கைக்கொண்டவருக்கு செய்வதற்கு அரியது என எதுவும் இல்லை.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
பிறரால் புகழப்படும் செயல்களை செய்ய மறந்தவருக்கு ஏழு பிறப்பும் நன்மை அமையாது.
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
தன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் போது மகிழுச்சியால் ஏற்பட்ட மறதியால் அழிந்தவர்களை நினைவில் கொள்ள வேண்டும்.
மைந்து - வலிமை
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
குறிக்கோளை மனதில் கொள்பவருக்கு, அதனை அடைதல் எளிதானது.
உள்ளியது - எண்ணியது, குறிக்கோள்
Labels:
அரசியல்,
திருக்குறள்,
பொச்சாவாமை,
பொருட்பால்
பொருட்பால் - அரசியல் - சுற்றம் - தழால் - 53
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
தன் பொருள் நிலையில் குன்றியவர்களிடமும் முன்பு போலவே பழகும் தன்மை சுற்றத்தவர்களிடம் காணப்படும்.
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
அன்பு குறையாத சுற்றம் அமையுமெனில் அது என்றும் பெருகும் பலவகை செல்வமும் தரும்.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
சுற்றத்தாருடன் அன்புடன் கலந்து பழகாதவன் வாழ்வு கரைகள் அற்ற குளத்தைப் பொல் பயன்றறது.
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
சுற்றத்தவர்கள் தன்னைச் சுற்றி இருந்து மகிழுமாறு செய்வதே ஒருவன் செல்வம் பெற்றதன் பயனாகும்.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
ஒருவனின் உதவும் பண்பும், அன்புடன் பேசும் குணமும் தொடர்ந்து சுற்றத்தாரை அவனுடன் இருக்கச் செய்யும்.
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
வேண்டியதைத் தரும் குணம், சினம் தவிர்த்தல் உடையவன் போல் சுற்றத்தாருடையவன் உலகில் இல்லை.
மருங்கு - நெருங்கிய, உடன் இருத்தல்
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
காக்கை கரைந்து பிற காக்கைகளுடன் தனக்குக் கிடைத்த உணவை சேர்ந்து உண்ணும். அத்தைகைய தன்மை உள்ளவர்கள் மேலும் உயர்வார்கள்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
அனைவரையும் பொதுவாகக் கருதாமல், திறமைக்கேற்றவாறு கருதுபவனை நெருங்கி வாழ அனைவரும் விரும்புவர்.
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
சுற்றத்தவராய் இருந்து பிரிந்தவர் அதற்கான காரணம் நீங்கினால் தாமாக வருவர்.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்
திருந்து எண்ணிக் கொளல்.
பக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் பின் வேறு காரணத்தால் திரும்பி வந்தாலும் அவரை ஆராய்ந்தே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சுற்றத்தார் கண்ணே உள.
தன் பொருள் நிலையில் குன்றியவர்களிடமும் முன்பு போலவே பழகும் தன்மை சுற்றத்தவர்களிடம் காணப்படும்.
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
அன்பு குறையாத சுற்றம் அமையுமெனில் அது என்றும் பெருகும் பலவகை செல்வமும் தரும்.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
சுற்றத்தாருடன் அன்புடன் கலந்து பழகாதவன் வாழ்வு கரைகள் அற்ற குளத்தைப் பொல் பயன்றறது.
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
சுற்றத்தவர்கள் தன்னைச் சுற்றி இருந்து மகிழுமாறு செய்வதே ஒருவன் செல்வம் பெற்றதன் பயனாகும்.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
ஒருவனின் உதவும் பண்பும், அன்புடன் பேசும் குணமும் தொடர்ந்து சுற்றத்தாரை அவனுடன் இருக்கச் செய்யும்.
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
வேண்டியதைத் தரும் குணம், சினம் தவிர்த்தல் உடையவன் போல் சுற்றத்தாருடையவன் உலகில் இல்லை.
மருங்கு - நெருங்கிய, உடன் இருத்தல்
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
காக்கை கரைந்து பிற காக்கைகளுடன் தனக்குக் கிடைத்த உணவை சேர்ந்து உண்ணும். அத்தைகைய தன்மை உள்ளவர்கள் மேலும் உயர்வார்கள்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
அனைவரையும் பொதுவாகக் கருதாமல், திறமைக்கேற்றவாறு கருதுபவனை நெருங்கி வாழ அனைவரும் விரும்புவர்.
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
சுற்றத்தவராய் இருந்து பிரிந்தவர் அதற்கான காரணம் நீங்கினால் தாமாக வருவர்.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்
திருந்து எண்ணிக் கொளல்.
பக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் பின் வேறு காரணத்தால் திரும்பி வந்தாலும் அவரை ஆராய்ந்தே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Labels:
அரசியல்,
சுற்றம் தழால்,
திருக்குறள்,
பொருட்பால்
Friday, November 02, 2007
பொருட்பால் - அரசியல் - தெரிந்து - வினையாடல் - 52
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
ஒரு செயலினால் விளையும் நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து நல்லனவற்றை செயல்படுத்தும் தன்மையுடையவனை செய்யப் பணிக்க வேண்டும்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
பொருள் வரும் வழிகளைப் பெருக்கி வளப்படுத்துவதற்கான தடைகளை அராயந்து களையக்கூடியவன் செயலில் ஈடுபட வேண்டும்.
உற்றவை - தடைகள்
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
அன்பு, அறிவு, அராய்ந்து தெளிதல், தன் ஆசைக்கு இடங்கொடாமை ஆகிய நான்கு குணங்களும் உடையவனைத் தேர்வு செய்ய வேண்டும்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
அனைத்து வகையிலும் ஆராய்ந்து பின் பணியில் ஈடுபடுத்தினாலும், பின்னரும் செய்யும் கடரையின் தன்மையால் மாறும் மனிதர் பலர்.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
செயலை ஆராய்ந்து, இடை வரும் தடைகளை பொறுத்துக் கொண்டு செய்ய வல்லவனுக்கு கடமையைத் தர வேண்டுமே அல்லாது வேறு வழியில் சிறந்தவன் என்று தவறாக எண்ணி வேலையை தரக்கூடாது.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
ஒரு செயலின் தன்மை அறிந்து, செயலை செய்யக் கூடியவனை அறிந்து பின் செயல்படுத்தும் காலமறிந்து செய்ய வேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
ஒரு செயலை ஒருவன், இந்த வகையில் செய்வான் என்று ஆய்ந்து அச்செயலை அவனிடம் விட வேண்டும்.
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
செயலைச் செய்பவன் என்று அறிந்து ஒப்படைத்த பின், செயலுக்குரியவனாய் (பதவியில்) அமர்த்த வேண்டும்.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.
செயலிலே கண்ணும் கருத்துமாக இருப்பவனை நியமித்தவன் தவறாக நினைத்தால் செலவம் அவனை விட்டு நீங்கும்.
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
மன்னன் நாள் தோறும் தான் செயல் செய்யப் பணித்தவர்களின் செயல்பாட்டினை கண்காணித்து வரவேண்டும். ஏனெனில் நாடு கோணாமல் இருப்பது, அச்செயல்கள் சரிவர நடப்பதை பொறுத்தது.
தன்மையான் ஆளப் படும்.
ஒரு செயலினால் விளையும் நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து நல்லனவற்றை செயல்படுத்தும் தன்மையுடையவனை செய்யப் பணிக்க வேண்டும்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
பொருள் வரும் வழிகளைப் பெருக்கி வளப்படுத்துவதற்கான தடைகளை அராயந்து களையக்கூடியவன் செயலில் ஈடுபட வேண்டும்.
உற்றவை - தடைகள்
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
அன்பு, அறிவு, அராய்ந்து தெளிதல், தன் ஆசைக்கு இடங்கொடாமை ஆகிய நான்கு குணங்களும் உடையவனைத் தேர்வு செய்ய வேண்டும்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
அனைத்து வகையிலும் ஆராய்ந்து பின் பணியில் ஈடுபடுத்தினாலும், பின்னரும் செய்யும் கடரையின் தன்மையால் மாறும் மனிதர் பலர்.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
செயலை ஆராய்ந்து, இடை வரும் தடைகளை பொறுத்துக் கொண்டு செய்ய வல்லவனுக்கு கடமையைத் தர வேண்டுமே அல்லாது வேறு வழியில் சிறந்தவன் என்று தவறாக எண்ணி வேலையை தரக்கூடாது.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
ஒரு செயலின் தன்மை அறிந்து, செயலை செய்யக் கூடியவனை அறிந்து பின் செயல்படுத்தும் காலமறிந்து செய்ய வேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
ஒரு செயலை ஒருவன், இந்த வகையில் செய்வான் என்று ஆய்ந்து அச்செயலை அவனிடம் விட வேண்டும்.
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
செயலைச் செய்பவன் என்று அறிந்து ஒப்படைத்த பின், செயலுக்குரியவனாய் (பதவியில்) அமர்த்த வேண்டும்.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.
செயலிலே கண்ணும் கருத்துமாக இருப்பவனை நியமித்தவன் தவறாக நினைத்தால் செலவம் அவனை விட்டு நீங்கும்.
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
மன்னன் நாள் தோறும் தான் செயல் செய்யப் பணித்தவர்களின் செயல்பாட்டினை கண்காணித்து வரவேண்டும். ஏனெனில் நாடு கோணாமல் இருப்பது, அச்செயல்கள் சரிவர நடப்பதை பொறுத்தது.
Labels:
அரசியல்,
திருக்குறள்,
தெரிந்து வினையாடல்,
பொருட்பால்
Thursday, November 01, 2007
பொருட்பால் - அரசியல் - தெரிந்து - தெளிதல் - 51
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
காக்கும் அறம், பொருள் மேல் உள்ள பற்று, விரும்பும் இன்பத்தின் வகை, உயிர் குறித்த பரிவு ஆகிய பண்புகளால் ஒருவனைத் தேர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.
(அரசன்) நல்ல குடும்பத்தில் பிறந்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல், பழிக்கு அஞ்சி வாழ்பவனைத் தேர்ந்து கொளல் வேண்டும்.
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
சிறந்தனவற்றை கற்ற குற்றமற்றவர்களை கவனித்தால் அவர்களிடம் அறியாமை இல்லை என்பது புலனாகும்.
ஆசு - குற்றம்
வெளிறு - அறியாமை
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
ஒருவரின் நல்ல குணங்களையும், குறைகளையும் ஆராய்ந்து மிகுந்த தன்மையால் வகைப்படுத்த வேண்டும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
ஒருவரின் புகழுக்கும், சிறுமைக்கும் அவரவர் செயல்களே அடிப்படை.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
உற்றார், பொருள் எதுவும் இல்லாதவரை தேர்ந்திடல் வேண்டாம். பிறர் பற்றி கருதாதவர்கள் பழி வரும் செயலுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.
ஓம்புக - தவிர்த்திடுக (கவனம் தேவை, ஓம்பல் என்பது காத்தலையும் குறிக்கும்)
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
ஒருவர் மீது கொண்ட அன்பால் எதையும் அறிந்து தெளியும் அறிவற்றவரை தேர்ந்து கொள்வது எல்லா அறியாமையையும் உடன் கொண்டு வரும்.
காதன்மை - அன்புடமை
கந்தா - வழியாக, அடிப்படையாக
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
ஒருவனைப் பற்றி சரியாக ஆராயாமல் துணையாகக் கொண்டு செயலாற்றும் வழி, விலகாத துன்பத்தைத் தரும்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
தெளிவாக ஆராயாமல் யாரையும் சேர்க்க வேண்டாம். அவ்வாறு ஆராய்ந்து சேர்த்த பின் அவர் காட்டும் வழியைத் தேர்ந்து கொள்ளலாம்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
ஆராயாமல் ஒருவனைச் சேர்த்தலும், ஆராய்ந்து சேர்த்தவனை ஐயப்படுதலும் விலகாத துன்பத்தைத் தரும்.
திறந்தெரிந்து தேறப் படும்.
காக்கும் அறம், பொருள் மேல் உள்ள பற்று, விரும்பும் இன்பத்தின் வகை, உயிர் குறித்த பரிவு ஆகிய பண்புகளால் ஒருவனைத் தேர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.
(அரசன்) நல்ல குடும்பத்தில் பிறந்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல், பழிக்கு அஞ்சி வாழ்பவனைத் தேர்ந்து கொளல் வேண்டும்.
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
சிறந்தனவற்றை கற்ற குற்றமற்றவர்களை கவனித்தால் அவர்களிடம் அறியாமை இல்லை என்பது புலனாகும்.
ஆசு - குற்றம்
வெளிறு - அறியாமை
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
ஒருவரின் நல்ல குணங்களையும், குறைகளையும் ஆராய்ந்து மிகுந்த தன்மையால் வகைப்படுத்த வேண்டும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
ஒருவரின் புகழுக்கும், சிறுமைக்கும் அவரவர் செயல்களே அடிப்படை.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
உற்றார், பொருள் எதுவும் இல்லாதவரை தேர்ந்திடல் வேண்டாம். பிறர் பற்றி கருதாதவர்கள் பழி வரும் செயலுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.
ஓம்புக - தவிர்த்திடுக (கவனம் தேவை, ஓம்பல் என்பது காத்தலையும் குறிக்கும்)
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
ஒருவர் மீது கொண்ட அன்பால் எதையும் அறிந்து தெளியும் அறிவற்றவரை தேர்ந்து கொள்வது எல்லா அறியாமையையும் உடன் கொண்டு வரும்.
காதன்மை - அன்புடமை
கந்தா - வழியாக, அடிப்படையாக
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
ஒருவனைப் பற்றி சரியாக ஆராயாமல் துணையாகக் கொண்டு செயலாற்றும் வழி, விலகாத துன்பத்தைத் தரும்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
தெளிவாக ஆராயாமல் யாரையும் சேர்க்க வேண்டாம். அவ்வாறு ஆராய்ந்து சேர்த்த பின் அவர் காட்டும் வழியைத் தேர்ந்து கொள்ளலாம்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
ஆராயாமல் ஒருவனைச் சேர்த்தலும், ஆராய்ந்து சேர்த்தவனை ஐயப்படுதலும் விலகாத துன்பத்தைத் தரும்.
Labels:
அரசியல்,
திருக்குறள்,
தெரிந்து தெளிதல்,
பொருட்பால்
Wednesday, October 31, 2007
பொருட்பால் - அரசியல் - இடனறிதல் - 50
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
பகைவரை முற்றுகையிடும் இடம் பார்த்த பின்னரே அதற்கான எந்த வேலையையும் தொடங்க வேண்டும். அது வரை அவனை இகழ்வதும் கூடாது.
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
பகையை எதிர்க்கும் வலிமை இருந்த போதும் தகுந்த காப்பு இருக்குமெனின் மிகுந்த பலன் கிடைக்கும்.
மொய்ம்பு - வலிமை
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
பகைவருக்கு காவல் இல்லாத இடம் அறிந்து தன்னைக் காத்தவாறு மோதினால் வலிமை இல்லாதவரும் வலிவுற்று வெல்ல இயலும்.
ஆற்றார் - வலிவில்லாதவர்
அடுப - வெற்றி
போற்றி - காத்து
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
பகையை எதிர்கொள்ள ஏற்ற இடம் அறிந்து செல்லும் அரசனை வெல்ல நினைத்தவரின் எண்ணம் ஈடேறாது.
துன்னியார் - சேர்ந்தவர்
துன்னி - அடைதல், சேர்தல்
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
ஆழமான நீரினுள் முதலை வென்று விடும்; ஆனால் நீரை நீங்கினால் முதலை வெல்ல இயலாது.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
கடலில் தேர் செலுத்த இயலாது, நிலத்தில் கப்பல் ஓடாது.
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
ஆழ சிந்தித்து ஏற்ற இடத்தில் செயல்படுவோருக்கு துணிவைத் தவிர வேறு துணை வேண்டிந்தில்லை.
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
சிறு படையாக இருந்த போதும் தனக்கேற்ற இடத்தை அடைந்து விட்டால் அதனை வெல்ல நினைத்த பெரும்படையின் ஊக்கம் அழிந்து விடும்.
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
காவலுடைய கோட்டையும், பெரும் வலிவும் இல்லாதவர் எனினும் அவருடைய இடத்தில் சென்று தாக்குதல் அரிது.
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
போர்களத்தில் வேல் கொண்ட வீர்ர்களை பயமற்று முகந்து தூக்கும் யானைகள் ஆனாலும் சேற்று நிலத்தில் கால் சிக்கிக் கொள்ளும் எனில் நரிகளும் கொன்று விடும்.
அடும் - கொல்லும்
இடங்கண்ட பின்அல் லது.
பகைவரை முற்றுகையிடும் இடம் பார்த்த பின்னரே அதற்கான எந்த வேலையையும் தொடங்க வேண்டும். அது வரை அவனை இகழ்வதும் கூடாது.
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
பகையை எதிர்க்கும் வலிமை இருந்த போதும் தகுந்த காப்பு இருக்குமெனின் மிகுந்த பலன் கிடைக்கும்.
மொய்ம்பு - வலிமை
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
பகைவருக்கு காவல் இல்லாத இடம் அறிந்து தன்னைக் காத்தவாறு மோதினால் வலிமை இல்லாதவரும் வலிவுற்று வெல்ல இயலும்.
ஆற்றார் - வலிவில்லாதவர்
அடுப - வெற்றி
போற்றி - காத்து
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
பகையை எதிர்கொள்ள ஏற்ற இடம் அறிந்து செல்லும் அரசனை வெல்ல நினைத்தவரின் எண்ணம் ஈடேறாது.
துன்னியார் - சேர்ந்தவர்
துன்னி - அடைதல், சேர்தல்
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
ஆழமான நீரினுள் முதலை வென்று விடும்; ஆனால் நீரை நீங்கினால் முதலை வெல்ல இயலாது.
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
கடலில் தேர் செலுத்த இயலாது, நிலத்தில் கப்பல் ஓடாது.
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
ஆழ சிந்தித்து ஏற்ற இடத்தில் செயல்படுவோருக்கு துணிவைத் தவிர வேறு துணை வேண்டிந்தில்லை.
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
சிறு படையாக இருந்த போதும் தனக்கேற்ற இடத்தை அடைந்து விட்டால் அதனை வெல்ல நினைத்த பெரும்படையின் ஊக்கம் அழிந்து விடும்.
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
காவலுடைய கோட்டையும், பெரும் வலிவும் இல்லாதவர் எனினும் அவருடைய இடத்தில் சென்று தாக்குதல் அரிது.
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
போர்களத்தில் வேல் கொண்ட வீர்ர்களை பயமற்று முகந்து தூக்கும் யானைகள் ஆனாலும் சேற்று நிலத்தில் கால் சிக்கிக் கொள்ளும் எனில் நரிகளும் கொன்று விடும்.
அடும் - கொல்லும்
பொருட்பால் - அரசியல் - காலமறிதல் - 49
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
பகலில் கூகையை எளிய காக்கை வென்று விடும். அது போல் பகைவரை வெல்லக் கூடிய தருணத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டும்.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
காலத்துக்கு ஏற்றவாறு செயல்படுதல் செல்வத்தை நீங்காத படி கட்டும் கயிறு ஆகும்.
ஆர்க்குங் கயிறு - கட்டும் கயிறு
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
காரணங்களுடன் தகுந்த காலத்தில் செயல்படுவதைப் போல் சிறந்த செயல் இல்லை.
கருவி - காரணம்
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
தகுந்த காலம் கருதி செயல்பட்டால் உலகை வெல்வதும் இயலும்.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
உலகை வெல்ல நினைப்பவர் மனம் தளராது அதற்கான காலத்தை எதிர் பார்த்து இருப்பர்.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
வலிமை மிகுந்தவன் தகுந்த காலம் கருதி ஒதுங்குதல் செம்மறி ஆட்டு கிடா மிகுந்த விசையோடு மோதுவதற்காக பின் செல்வதை ஒத்தது.
தகர் - செம்மறி ஆட்டுக் கிடா
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
பகைவரிடம் உடனே சினத்தைக் காட்டாமல் தகுந்த காலம் வரும் வரை உள்ளே சினந்திருப்பர் அறிவுடையோர்.
பொள்ளென - சல்லுனு மாதிரி விரைவுக்குறிச் சொல் (எ-கா) பொள்ளென விடிஞ்சிருச்சு
வேர் - சினம்
ஒள்ளியவர் - அறிவுடையவர்
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
பகைவரை கண்டால் பணிந்திரு. அழியும் காலம் வரும்போது அவர் தலை கீழே விழும்.
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
சிறந்த நேரம் கூடி வரும் போது அந்த கணத்திற்காக காத்திருந்த செயல்களை உடன் செய்திடல் வேண்டும்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
தளரந்த காலத்தில் கொக்கு மீனுக்காக காத்திருப்பது போல் காத்திருத்தல் வேண்டும். தகுந்த நேலம் அமையும் போது மீனை விரைந்து கொத்துதல் போல செயலை முடிக்க வேண்டும்.
சீர்த்த - வாய்த்த
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
பகலில் கூகையை எளிய காக்கை வென்று விடும். அது போல் பகைவரை வெல்லக் கூடிய தருணத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டும்.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
காலத்துக்கு ஏற்றவாறு செயல்படுதல் செல்வத்தை நீங்காத படி கட்டும் கயிறு ஆகும்.
ஆர்க்குங் கயிறு - கட்டும் கயிறு
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
காரணங்களுடன் தகுந்த காலத்தில் செயல்படுவதைப் போல் சிறந்த செயல் இல்லை.
கருவி - காரணம்
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
தகுந்த காலம் கருதி செயல்பட்டால் உலகை வெல்வதும் இயலும்.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
உலகை வெல்ல நினைப்பவர் மனம் தளராது அதற்கான காலத்தை எதிர் பார்த்து இருப்பர்.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
வலிமை மிகுந்தவன் தகுந்த காலம் கருதி ஒதுங்குதல் செம்மறி ஆட்டு கிடா மிகுந்த விசையோடு மோதுவதற்காக பின் செல்வதை ஒத்தது.
தகர் - செம்மறி ஆட்டுக் கிடா
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
பகைவரிடம் உடனே சினத்தைக் காட்டாமல் தகுந்த காலம் வரும் வரை உள்ளே சினந்திருப்பர் அறிவுடையோர்.
பொள்ளென - சல்லுனு மாதிரி விரைவுக்குறிச் சொல் (எ-கா) பொள்ளென விடிஞ்சிருச்சு
வேர் - சினம்
ஒள்ளியவர் - அறிவுடையவர்
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
பகைவரை கண்டால் பணிந்திரு. அழியும் காலம் வரும்போது அவர் தலை கீழே விழும்.
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
சிறந்த நேரம் கூடி வரும் போது அந்த கணத்திற்காக காத்திருந்த செயல்களை உடன் செய்திடல் வேண்டும்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
தளரந்த காலத்தில் கொக்கு மீனுக்காக காத்திருப்பது போல் காத்திருத்தல் வேண்டும். தகுந்த நேலம் அமையும் போது மீனை விரைந்து கொத்துதல் போல செயலை முடிக்க வேண்டும்.
சீர்த்த - வாய்த்த
பொருட்பால் - அரசியல் - வலியறிதல் - 48
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
செயலின் வலிவு, தன் வலிவு, எதிரியின் வலிவு மற்றும் துணையாய் வரக்கூடியவரின் வலிவு போன்றவற்றை ஆராய்ந்து செயலில் இறங்கு வேண்டும்.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
தன்னால் இயலும் அளவு அறிந்து அதற்கேற்ற செயல்களில் ஈடுபடுபவர் செய்து முடிக்காத செயல் இல்லை.
ஒல்வது - இயன்றது
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
தான் பெற்ற வலிமையை உணராது, ஆர்வக் கோளாறால் மிகுந்த ஊக்கம் தேவைப்படும் செயலில் இறங்கி இடையில் தடுமாறி தளர்ந்தவர் பலர்.
முரிந்தார் - முடியாது நின்றார்
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
அயலரிடம் பொருந்தாமல், தன் வலிமை பற்றிய அறிவில்லாது, தன் வலிமையை வியப்பவன் விரைவாக அழிய நேரிடும்.
ஆங்கு - அயலர்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மயிற்பீலியாயினும் வண்டியில் அளவு மிகுந்து ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து விடும்.
பெய் - ஏற்றுதல்
சாகாடு - வண்டி
சால - மிகவும்
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
ஒரு மரத்தில் நுனிக்கொம்பு வரை ஏறிய பின்னும் அறிவற்ற ஊக்கத்தினால் மேலும் ஏற முயன்றால் அது அவன் உயிருக்கு இறுதியாகி விடும்.
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
கொடுக்கும் போது தன் பொருளின் அளவறிந்து ஈதல் வேண்டும். அது பொருளை காக்கும் நெறி ஆகும்.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
வரவுக்கு தகுந்த செலவு அமையுமானால் குறைவான வரவினால் துன்பம் இல்லை.
இட்டிது - சிறியது
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
தன் வருமானத்தின் அளவு அறிந்து அதற்குட்பட்டு வாழாதவன் வாழ்க்கை நிலையானது போன்று தோன்றி பின் அத்தோற்றமும் அழியும்.
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
தன்னிடம் உள்ள வளத்தின் அளவை ஆராயாமல் உதவி வந்தால் அவ்வளம் விரைவில் குன்றி அழியும்.
வல்லை - விரைந்து
துணைவலியும் தூக்கிச் செயல்.
செயலின் வலிவு, தன் வலிவு, எதிரியின் வலிவு மற்றும் துணையாய் வரக்கூடியவரின் வலிவு போன்றவற்றை ஆராய்ந்து செயலில் இறங்கு வேண்டும்.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
தன்னால் இயலும் அளவு அறிந்து அதற்கேற்ற செயல்களில் ஈடுபடுபவர் செய்து முடிக்காத செயல் இல்லை.
ஒல்வது - இயன்றது
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
தான் பெற்ற வலிமையை உணராது, ஆர்வக் கோளாறால் மிகுந்த ஊக்கம் தேவைப்படும் செயலில் இறங்கி இடையில் தடுமாறி தளர்ந்தவர் பலர்.
முரிந்தார் - முடியாது நின்றார்
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
அயலரிடம் பொருந்தாமல், தன் வலிமை பற்றிய அறிவில்லாது, தன் வலிமையை வியப்பவன் விரைவாக அழிய நேரிடும்.
ஆங்கு - அயலர்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மயிற்பீலியாயினும் வண்டியில் அளவு மிகுந்து ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து விடும்.
பெய் - ஏற்றுதல்
சாகாடு - வண்டி
சால - மிகவும்
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
ஒரு மரத்தில் நுனிக்கொம்பு வரை ஏறிய பின்னும் அறிவற்ற ஊக்கத்தினால் மேலும் ஏற முயன்றால் அது அவன் உயிருக்கு இறுதியாகி விடும்.
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
கொடுக்கும் போது தன் பொருளின் அளவறிந்து ஈதல் வேண்டும். அது பொருளை காக்கும் நெறி ஆகும்.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
வரவுக்கு தகுந்த செலவு அமையுமானால் குறைவான வரவினால் துன்பம் இல்லை.
இட்டிது - சிறியது
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
தன் வருமானத்தின் அளவு அறிந்து அதற்குட்பட்டு வாழாதவன் வாழ்க்கை நிலையானது போன்று தோன்றி பின் அத்தோற்றமும் அழியும்.
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
தன்னிடம் உள்ள வளத்தின் அளவை ஆராயாமல் உதவி வந்தால் அவ்வளம் விரைவில் குன்றி அழியும்.
வல்லை - விரைந்து
பொருட்பால் - அரசியல் - தெரிந்து - செயல்வகை - 47
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
ஒரு செயலினால் ஏற்படும் அழிவு, ஆக்க விளைவு மற்றும் கிடைக்கக் கூடிய வருமானம் ஆகியவற்றை சிந்தித்துப் பின் செயலில் இறங்க வேண்டும்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
தெரிந்தவர்களோடு ஆராய்ந்து, பின்னர் அதன் பலன்களை சீர்தூக்கி செயல்படுபவர் அடைய இயலாத பொருள் எதுவும் இல்லை.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
வரக்கூடிய செலவம் கருதி தான் முன்பு செய்த முதல் இழக்குக் படியான செயலை அறிவுடையவர் மைற்கொள்ள மாட்டார்கள்.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
பிறர் பரிகசிக்கும் குற்றம் விளையும் என அஞ்சுபவர், தாம் தொடங்கும் செயல் குறித்து தெளிவு இல்லையெனில் தொடங்க மாட்டார்கள்.
இளி - பரிகசிப்பு
ஏதம் - குற்றம், குறைபாடு
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
அனைத்து வழிகளையும் ஆராயாமல் படை மேற்கொள்ளல் பகைவரை, வளர் நிலத்தில் நிறுத்தும் (வசதியான சூழலில்) வழிகளில் ஒன்று.
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
செய்யத் தகாததை செய்வதும் கெடுதல்; செய்யக்கூடியதை செய்யாமலிருத்தலும் கெடுதல்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
நன்கு ஆராய்ந்து ஒரு செயலில் இறங்க வேண்டும். அவ்வாறு ஆராயாமல் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என இறங்குதல் இழுக்கு ஏற்படுத்தும்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
சரியான வழியில் செய்யாத முயற்சி பலர் காத்து நின்றாலும் தவறாக முடியும்.
வருத்தம் - முயற்சி
போற்று - காப்பு
பொத்துப் படும் - தவறாக முடியும்
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
அவரவர் இயல்பு அறியாமல் செயலில் இறங்கினால் நல்ல செயலும் தவறாக முடியும்.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
தமது இயல்புக்கு ஒவ்வாத செயலை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பது அறிந்து பிறர் நகைக்காத செயல் என ஆராய்ந்து செய்ய வேண்டும்.
ஊதியமும் சூழ்ந்து செயல்.
ஒரு செயலினால் ஏற்படும் அழிவு, ஆக்க விளைவு மற்றும் கிடைக்கக் கூடிய வருமானம் ஆகியவற்றை சிந்தித்துப் பின் செயலில் இறங்க வேண்டும்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
தெரிந்தவர்களோடு ஆராய்ந்து, பின்னர் அதன் பலன்களை சீர்தூக்கி செயல்படுபவர் அடைய இயலாத பொருள் எதுவும் இல்லை.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
வரக்கூடிய செலவம் கருதி தான் முன்பு செய்த முதல் இழக்குக் படியான செயலை அறிவுடையவர் மைற்கொள்ள மாட்டார்கள்.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
பிறர் பரிகசிக்கும் குற்றம் விளையும் என அஞ்சுபவர், தாம் தொடங்கும் செயல் குறித்து தெளிவு இல்லையெனில் தொடங்க மாட்டார்கள்.
இளி - பரிகசிப்பு
ஏதம் - குற்றம், குறைபாடு
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
அனைத்து வழிகளையும் ஆராயாமல் படை மேற்கொள்ளல் பகைவரை, வளர் நிலத்தில் நிறுத்தும் (வசதியான சூழலில்) வழிகளில் ஒன்று.
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
செய்யத் தகாததை செய்வதும் கெடுதல்; செய்யக்கூடியதை செய்யாமலிருத்தலும் கெடுதல்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
நன்கு ஆராய்ந்து ஒரு செயலில் இறங்க வேண்டும். அவ்வாறு ஆராயாமல் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என இறங்குதல் இழுக்கு ஏற்படுத்தும்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
சரியான வழியில் செய்யாத முயற்சி பலர் காத்து நின்றாலும் தவறாக முடியும்.
வருத்தம் - முயற்சி
போற்று - காப்பு
பொத்துப் படும் - தவறாக முடியும்
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
அவரவர் இயல்பு அறியாமல் செயலில் இறங்கினால் நல்ல செயலும் தவறாக முடியும்.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
தமது இயல்புக்கு ஒவ்வாத செயலை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பது அறிந்து பிறர் நகைக்காத செயல் என ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Labels:
அரசியல்,
திருக்குறள்,
தெரிந்து செயல்வகை,
பொருட்பால்
Tuesday, October 30, 2007
பொருட்பால் - அரசியல் - சிற்றினம் - சேராமை - 46
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
பெரியோர் சிற்றினம் சேர்தல் குறித்து அஞ்சுவர். சிறுமைக் குணமுடையோர் அவர் தம் சுற்றம் எனக் கூடுவர்.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
நீரின் குணம் அது சேர்ந்த நிலத்தை ஒத்தது. மனிதருக்கு தாம் சேரும் இனத்தை ஒத்தது.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
மனிதருக்கு உணர்வு மனதைப் பொருத்து அமைவது போல் சார்ந்த இனத்தால் அவன் தன்மை அமையும்.
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
ஒருவனின் அறிவு மனதின் கண் உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில் அவன் சேர்ந்த இனத்தால் அமையும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
சிந்தனை, செயல் இரண்டின் தூய்மையும் ஒருவன் சேரும் இனத்தால் அமையும்.
தூவா - பற்றுக்கோடு, சார்பு
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.
மனத்தூய்மை உடையவர்களுக்கு நல் மக்கள் பிறப்பர். இனத்தூய்மை அடைந்தார்க்கு செய்வன அனைத்தும் நற்செயல்களாய் அமையும்.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
நல்ல மனம் மனிதருக்கு ஆக்கம் தரும். நல்ல இனம் எல்லா புகழையும் சேர்க்கும்.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
நல்ல மனம் படைத்திருப்பினும் சான்றோர்களுக்கு நல்ல இனம் சேர்வதே வல்லமையைத் தரும்.
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
மனத்திற்கு ஏற்றபடி மறுமை கிட்டும். அம்மறுமையும் சேரும் இனத்தின் தன்மையால் மாறக்கூடியது.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
நல்ல இனத்தருடன் சேர்வது மிகச்சிறந்த துணை. தீய இனத்தருடன் இழைவது துன்பத்தைத் தருவதாகும்.
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
பெரியோர் சிற்றினம் சேர்தல் குறித்து அஞ்சுவர். சிறுமைக் குணமுடையோர் அவர் தம் சுற்றம் எனக் கூடுவர்.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
நீரின் குணம் அது சேர்ந்த நிலத்தை ஒத்தது. மனிதருக்கு தாம் சேரும் இனத்தை ஒத்தது.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
மனிதருக்கு உணர்வு மனதைப் பொருத்து அமைவது போல் சார்ந்த இனத்தால் அவன் தன்மை அமையும்.
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
ஒருவனின் அறிவு மனதின் கண் உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில் அவன் சேர்ந்த இனத்தால் அமையும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
சிந்தனை, செயல் இரண்டின் தூய்மையும் ஒருவன் சேரும் இனத்தால் அமையும்.
தூவா - பற்றுக்கோடு, சார்பு
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.
மனத்தூய்மை உடையவர்களுக்கு நல் மக்கள் பிறப்பர். இனத்தூய்மை அடைந்தார்க்கு செய்வன அனைத்தும் நற்செயல்களாய் அமையும்.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
நல்ல மனம் மனிதருக்கு ஆக்கம் தரும். நல்ல இனம் எல்லா புகழையும் சேர்க்கும்.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
நல்ல மனம் படைத்திருப்பினும் சான்றோர்களுக்கு நல்ல இனம் சேர்வதே வல்லமையைத் தரும்.
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
மனத்திற்கு ஏற்றபடி மறுமை கிட்டும். அம்மறுமையும் சேரும் இனத்தின் தன்மையால் மாறக்கூடியது.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
நல்ல இனத்தருடன் சேர்வது மிகச்சிறந்த துணை. தீய இனத்தருடன் இழைவது துன்பத்தைத் தருவதாகும்.
Labels:
அரசியல்,
சிற்றினம் சேராமை,
திருக்குறள்,
பொருட்பால்
பொருட்பால் - அரசியல் - பெரியோரைத் - துணைக்கோடல் - 45
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
அரசன் அறம் பற்றிய அறிவுடன் தன்னில் சிறந்த அறிவுடையோரின் நட்பின் திறன் குறித்து ஆய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
அரசன் நாட்டில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி, துன்பம் வரும் முன் காக்கும் தன்மை உடையவரை உடன் பெற்றிரித்தல் வேண்டும்.
பெற்றியார் - தன்மையுடையவர்
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
போற்றக்கூடிய குணங்கள் வாய்ந்த பெரியவர்களைத் துணைக் கொள்வது அரசனது சிறப்புகள் எல்லாவற்றிலும் சிறந்ததது.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
அருங்குணத்தால் தன்னைவிடப் பெரியவர்களைத் துணைக்கொள்வது அரசனுக்கு மிகுந்த வலிமையைத் தரும்.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
ஆய்ந்து கூறும் அமைச்சர்களை கண் போல் போற்றும் மன்னன், அத்தகையோரை அவர் திறம் ஆய்ந்து துணைக்கொள்ள வேண்டும்.
சூழ்வார் - ஆய்ந்து கூறுவோர்
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
தக்க பெரியோரைத் துணையாகக் கொண்ட மன்னனுக்க் பகைவரால் வரும் தீது ஏதும் இல்லை.
செற்றார் - பகைவர்
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
தவறுகளைச் சுட்டி மன்னன் நலம் நாடி கடிந்து கூறத்தக்கப் பெரியவர்களைத் துணையாகக் கொண்ட மன்னனுக்கு கேடு விளைவிக்க வல்லவர் யார்?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
மேற்கண்டவாறு இடித்துக் கூறும் துணையோரின் காவல் இல்லாத மன்னன் அழிவதற்கு பகைவர் எவரும் தேவை இல்லை.
ஏமரா - காவலற்ற
முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
முதல் இல்லாத வணிகருக்கு வருமானம் இல்லை. அது போல் தாங்கும் துணையற்ற அரசனுக்கு நிலைத்த தன்மை வாய்க்காது.
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
நல்ல பெருமக்களின் தொடர்பைக் கைவிடுதல் அரசனுக்கு பலரின் பகையை தனியே கொள்வதைப் போல் பத்து மடங்கு தீமையைத் தரும்.
திறனறிந்து தேர்ந்து கொளல்.
அரசன் அறம் பற்றிய அறிவுடன் தன்னில் சிறந்த அறிவுடையோரின் நட்பின் திறன் குறித்து ஆய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
அரசன் நாட்டில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி, துன்பம் வரும் முன் காக்கும் தன்மை உடையவரை உடன் பெற்றிரித்தல் வேண்டும்.
பெற்றியார் - தன்மையுடையவர்
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
போற்றக்கூடிய குணங்கள் வாய்ந்த பெரியவர்களைத் துணைக் கொள்வது அரசனது சிறப்புகள் எல்லாவற்றிலும் சிறந்ததது.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
அருங்குணத்தால் தன்னைவிடப் பெரியவர்களைத் துணைக்கொள்வது அரசனுக்கு மிகுந்த வலிமையைத் தரும்.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
ஆய்ந்து கூறும் அமைச்சர்களை கண் போல் போற்றும் மன்னன், அத்தகையோரை அவர் திறம் ஆய்ந்து துணைக்கொள்ள வேண்டும்.
சூழ்வார் - ஆய்ந்து கூறுவோர்
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
தக்க பெரியோரைத் துணையாகக் கொண்ட மன்னனுக்க் பகைவரால் வரும் தீது ஏதும் இல்லை.
செற்றார் - பகைவர்
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
தவறுகளைச் சுட்டி மன்னன் நலம் நாடி கடிந்து கூறத்தக்கப் பெரியவர்களைத் துணையாகக் கொண்ட மன்னனுக்கு கேடு விளைவிக்க வல்லவர் யார்?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
மேற்கண்டவாறு இடித்துக் கூறும் துணையோரின் காவல் இல்லாத மன்னன் அழிவதற்கு பகைவர் எவரும் தேவை இல்லை.
ஏமரா - காவலற்ற
முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
முதல் இல்லாத வணிகருக்கு வருமானம் இல்லை. அது போல் தாங்கும் துணையற்ற அரசனுக்கு நிலைத்த தன்மை வாய்க்காது.
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
நல்ல பெருமக்களின் தொடர்பைக் கைவிடுதல் அரசனுக்கு பலரின் பகையை தனியே கொள்வதைப் போல் பத்து மடங்கு தீமையைத் தரும்.
Labels:
அரசியல்,
திருக்குறள்,
பெரியோரைத் துணைக்கோடல்,
பொருட்பால்
பொருட்பால் - அரசியல்- குற்றம் - கடிதல் - 44
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
அகந்தையும், சினமும், சிறுமை குணமும் இல்லாதவர்கள் செல்வம் பெருகும் தன்மையுடையது.
பெருக்கம் - செல்வம்
பெருமிதம் - பெருகும்
நீர்த்து - தன்மை
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
பேராசையும், மாண்பு இல்லாத மானமும் (இழிவு நிலை), அளவற்ற மகிழ்ச்சியும் கொண்டாடுவது அரசனுக்கு ஒவ்வாதது.
இவறல் - பேராசை
மாணா - அளவில்லா
ஏதம் - குற்றம்
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
சிறிதளவே குற்றம் நேர்ந்தாலும் பெரிய (பனை உயர) அளவு குற்றம் செய்யததாக வருந்துவர், அதனால் வரும் பழிச்சொல்லுக்கு அஞ்சுபவர்கள்.
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.
குற்றம் அழிவு தரும் பகையாகும் ஆதலால் குற்றம் வராத வாழ்க்கை வாழ்வதைப் பொருளாகக் கொள்ள வேண்டும்.
அற்றம் - அழிவு
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
குற்றம் வருமுன்னர் அதிலிருந்து தன்னை கத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை எரியும் கொள்ளி முன்னர் வைக்கப் பட்ட வைக்கோல் போல அழியும்.
வைத்தூறு - வைக்கோல்
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?
தன்னுடைய குற்றம் நீக்கி பின்னர் பிறர் குற்றத்தை ஆராயும் அரசனை யார் குற்றம் சொல்ல முடியும்.
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
பெற்ற செல்வத்தால் செய்யக்கூடிய நல்லனவற்றைச் செய்யாமல் இன்னும் பேராசை கொள்பவனின் செல்வம் தங்காமல் அழியும்.
உயல் - இருத்தல்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
பற்று கொண்ட உள்ளம் என்னும் பேராசை மற்ற குற்றங்களுள் வைத்து எண்ணப்படும் குற்றம் இல்லை, தனிப்பெரும் குற்றம் ஆகும்.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
தன்னைத் தானே வியக்காதிருத்தலும், நன்மை பயக்காத செயல்களைச் செய்யாதிருத்தலும் வேண்டும்.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
தான் விரும்பிய பொருளை பிறர் அறியா வண்ணம் நுகரக் கூடியவனின் பகைவர் கருதும் சூழ்ச்சி பலிக்காது.
காதல் - விருப்பம்
ஏதில - பழுது
ஏதிலார் - பகைவர்
நூல் - சூழ்ச்சி செய்தல்
பெருக்கம் பெருமித நீர்த்து.
அகந்தையும், சினமும், சிறுமை குணமும் இல்லாதவர்கள் செல்வம் பெருகும் தன்மையுடையது.
பெருக்கம் - செல்வம்
பெருமிதம் - பெருகும்
நீர்த்து - தன்மை
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
பேராசையும், மாண்பு இல்லாத மானமும் (இழிவு நிலை), அளவற்ற மகிழ்ச்சியும் கொண்டாடுவது அரசனுக்கு ஒவ்வாதது.
இவறல் - பேராசை
மாணா - அளவில்லா
ஏதம் - குற்றம்
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
சிறிதளவே குற்றம் நேர்ந்தாலும் பெரிய (பனை உயர) அளவு குற்றம் செய்யததாக வருந்துவர், அதனால் வரும் பழிச்சொல்லுக்கு அஞ்சுபவர்கள்.
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.
குற்றம் அழிவு தரும் பகையாகும் ஆதலால் குற்றம் வராத வாழ்க்கை வாழ்வதைப் பொருளாகக் கொள்ள வேண்டும்.
அற்றம் - அழிவு
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
குற்றம் வருமுன்னர் அதிலிருந்து தன்னை கத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை எரியும் கொள்ளி முன்னர் வைக்கப் பட்ட வைக்கோல் போல அழியும்.
வைத்தூறு - வைக்கோல்
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?
தன்னுடைய குற்றம் நீக்கி பின்னர் பிறர் குற்றத்தை ஆராயும் அரசனை யார் குற்றம் சொல்ல முடியும்.
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
பெற்ற செல்வத்தால் செய்யக்கூடிய நல்லனவற்றைச் செய்யாமல் இன்னும் பேராசை கொள்பவனின் செல்வம் தங்காமல் அழியும்.
உயல் - இருத்தல்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
பற்று கொண்ட உள்ளம் என்னும் பேராசை மற்ற குற்றங்களுள் வைத்து எண்ணப்படும் குற்றம் இல்லை, தனிப்பெரும் குற்றம் ஆகும்.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
தன்னைத் தானே வியக்காதிருத்தலும், நன்மை பயக்காத செயல்களைச் செய்யாதிருத்தலும் வேண்டும்.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
தான் விரும்பிய பொருளை பிறர் அறியா வண்ணம் நுகரக் கூடியவனின் பகைவர் கருதும் சூழ்ச்சி பலிக்காது.
காதல் - விருப்பம்
ஏதில - பழுது
ஏதிலார் - பகைவர்
நூல் - சூழ்ச்சி செய்தல்
Labels:
அரசியல்,
குற்றம் கடிதல்,
திருக்குறள்,
பொருட்பால்
Subscribe to:
Posts (Atom)