அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
ஒரு செயலினால் ஏற்படும் அழிவு, ஆக்க விளைவு மற்றும் கிடைக்கக் கூடிய வருமானம் ஆகியவற்றை சிந்தித்துப் பின் செயலில் இறங்க வேண்டும்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
தெரிந்தவர்களோடு ஆராய்ந்து, பின்னர் அதன் பலன்களை சீர்தூக்கி செயல்படுபவர் அடைய இயலாத பொருள் எதுவும் இல்லை.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
வரக்கூடிய செலவம் கருதி தான் முன்பு செய்த முதல் இழக்குக் படியான செயலை அறிவுடையவர் மைற்கொள்ள மாட்டார்கள்.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
பிறர் பரிகசிக்கும் குற்றம் விளையும் என அஞ்சுபவர், தாம் தொடங்கும் செயல் குறித்து தெளிவு இல்லையெனில் தொடங்க மாட்டார்கள்.
இளி - பரிகசிப்பு
ஏதம் - குற்றம், குறைபாடு
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
அனைத்து வழிகளையும் ஆராயாமல் படை மேற்கொள்ளல் பகைவரை, வளர் நிலத்தில் நிறுத்தும் (வசதியான சூழலில்) வழிகளில் ஒன்று.
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
செய்யத் தகாததை செய்வதும் கெடுதல்; செய்யக்கூடியதை செய்யாமலிருத்தலும் கெடுதல்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
நன்கு ஆராய்ந்து ஒரு செயலில் இறங்க வேண்டும். அவ்வாறு ஆராயாமல் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என இறங்குதல் இழுக்கு ஏற்படுத்தும்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
சரியான வழியில் செய்யாத முயற்சி பலர் காத்து நின்றாலும் தவறாக முடியும்.
வருத்தம் - முயற்சி
போற்று - காப்பு
பொத்துப் படும் - தவறாக முடியும்
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
அவரவர் இயல்பு அறியாமல் செயலில் இறங்கினால் நல்ல செயலும் தவறாக முடியும்.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
தமது இயல்புக்கு ஒவ்வாத செயலை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பது அறிந்து பிறர் நகைக்காத செயல் என ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment