தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
தன்னுடைய ஊனை பெருக்குவதற்கு பிறிதொன்றின் ஊனை உண்பவன் எப்படி அருள் கொண்டவர் ஆவான்.
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருளால் அதைப்போற்றாதவர்க்கு எந்தப்பயனும் இல்லை அதுபோல அருளால் ஊன் தின்பவர்க்கு எந்தப்பயனும் இல்லை
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
உடல்சுவையாகிய ஊனை உண்டவர் மனமானது படையைகொண்டவருக்கு எப்படி நல்லதை(கருணையை) நோக்காது இருக்குமோ அவ்வாறே இருக்கும்
அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்
அருளில்லாத்து எதுவென்றால் கொல்லாதிருத்தல். அதற்கெதிர் கொன்று ஊன் தின்னுதல் என்னும் பாவச்செயல்
கோறல்- கொல்லுதல்
பொருளல்லது- நல்லது இல்லாத்து
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
உயிர் நிலை பெறுவதற்கு ஊன் உண்ணாமை வேண்டும் அவ்வாறின்றி ஊன்உண்டால் (உமிழ்வதற்கு) வாய் திறவாது நரகம்(நரகத்தினிடம் விழுந்துவிடுவான்)
அண்ணாத்தல்- வாய்திறவாதிருத்தல்
அளறு- நரகம்.
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
தின்னுவதற்காக கொல்லாது இருந்தால் உலகத்தில் யாரும் விலைக்காக ஊனைவிற்க மாற்காட்டார்கள்
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்
புலால் உண்ணாமை வரும் எப்படி என்றால் புலாலானது மற்றொரு உயிரின் புண் என்று உணர்வு வரப்பெறின்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
குற்றமற்ற அறிவைப்பெற்றோர் உயிரின் தலைபிரிந்த ஊனை உண்ணார்.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
அவிசு எனப்படும் வேண்டு பொருட்களை சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விட நல்லது ஒரு உயிரைப்போக்கி அதை உண்ணாமை.
செகுத்து- போக்கி
வேட்டல்- வேள்விகள்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
கொல்லாதவனை, புலால் மறுத்தவனை எல்லா உயிரும் கைகூப்பி தொழும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment