Sunday, July 08, 2007

உலக அதிசயங்கள் - பகுதி 1

ஒரு வழியாக உலக அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டன. இந்த அதிசயங்களைப் பற்றி சில வரிகள், எனக்குத் தெரிந்த வரையில்.
1. தாஜ் மஹால்

பிடித்தது - எழில் கொஞ்சும் வடிவம். காதலின் சின்னம் ஆதலால், பார்க்கும் பொழுது (படத்தில் தான்) துணையை நினைத்துக் கொள்வேன்.

பிடிக்காதது - என்ன தான் அழகு என்றாலும், ஷாஜஹானின் தனிப்பட்ட விருப்பத்திற்காக கொடுங்கோல்(?) ஆணையை ஏற்று எழும்பிய, பல இழந்த உயிர்களின் நினைவகமும் அல்லவா?

2. சீனப் பெருஞ்சுவர்

நாட்டை மங்கோலியப் படையெடுப்பில் இருந்து காப்பதற்காக பல காத தூரத்திற்கு கட்டப்பட்டது. ஓரளவே பயன் தந்தது என்றாலும், விண் வெளியிலிருந்து காணலாம் என்பது பொய் என்றாலும் பிரமாண்டம் கை கொடுத்திருக்கிறது.

3. ஏசுவின் சிலை

பிரேசிலின் பிரமாண்டம் என்பதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை.

4. இட்ஸா பிரமிடு - மெக்ஸிகோ

எகிப்து பிரமிடுகளைப் போன்று வட அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த மாயன் நாகரிக மனிதர்களால் கட்டப்பட்டது. பழைய உலக அதிசயங்கள் பட்டியலிடப்பட்ட போது மாயன்களைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. தாமதமான அங்கீகாரம்.

5. மச்சு பிச்சு - பெரு

மாயன்களின் ஒன்று விட்ட இன்கா நாகரிக மக்களின் மலை நகரம். இன்கா மக்களின் நாடு ஸ்பானியர்களால் சூறையாடப்பட்டபொழுது தப்பித்த எச்சம். நான் சென்று பார்க்க விரும்பும் மிச்சம்.

6. குடைவரை அரங்கம் - பெட்ரா, ஜோர்டான்

மாமல்லபுரம், சித்தன்னவாசல், அஜந்தாவைப் பார்க்காமல் எப்படி எழுதுவது?

7. கொலோசியம் - ரோம்

பண்டைய கால விளையாட்டரங்கம்.
படையெடுப்பின் அழிவில் மிஞ்சியது
காலத்தை விஞ்சியதை
உலகம் அதிசயம் என கொஞ்சியது.

விட்டுப் போன ஈஸ்டர் தீவுகள் மற்றும் பழைய அதிசயங்கள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.

No comments: