Saturday, March 15, 2008

சிட்டே சிட்டே பறந்து வா!

சிட்டே சிட்டே பறந்து வா!

சிட்டே சிட்டே பறந்து வா!
சிறகை சிறகை விரித்து வா!
கொட்டிக் கிடக்கும் மணிகளைக்
கொத்தி கொத்தித் திண்ண வா!
ஆற்று நீரில் குளிக்கிறாய்!
அழகாய் துள்ளி ஆடுகிறாய்!
சேற்று வயலில் அமர்கிறாய்!
திறந்த வெளியில் திரிகிறாய்!
உன்னைப் போல பறக்கனும்;
உயர உயர செல்லனும்!
என்னை அழைத்துச் சென்றிடு;
ஏற்ற இடத்தைக் காட்டிடு!

No comments: