புத்தகம் படிக்கலாமா!
தேன் இருக்கும் இடத்தினைத்
தேடி மொய்க்கும் வண்டு போல்,
சீனி உள்ள இடத்தினைத்
தேடி ஊறும் எறும்பு போல்,
பழம் நிறைந்த சோலையைப்
பார்த்துச் செல்லும் கிளியைப் போல்,
வளம் நிறைந்த நாட்டிலே
வந்து சேரும் மக்கள் போல்,
பள்ளமான இடத்தினைப்
பார்த்துப் பாயும் வெள்ளம் போல்,
நல்ல நல்ல நூல்களை
நாடி நாமும் பயிலுவோம்!
Saturday, March 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment