Saturday, March 15, 2008

கணக்குப் போடலாமா!

நான் ஒரு கணிதமேதை!



ஒன்றும் ஒன்றும் இரண்டாகும்;
உழைத்துப் படித்தால் பலன் கூடும்! (1+1 = 2)

இரண்டும் இரண்டும் நான்காகும்;
இனிக்கும் பேச்சு புகழ் கூட்டும்! (2+2 = 4)

மூன்றும் மூன்றும் ஆறாகும்;
முயற்சி உயர்வின் வேராகும்! (3+3 = 6)

நான்கும் நான்கும் எட்டாகும்;
நாணல் அடக்கம் சீர் நல்கும்! (4+4 = 8)

ஐந்தும் ஐந்தும் பத்தாகும்;
அன்பை மதித்தால் துயர் போகும்! (5 +5 = 10)

No comments: