Saturday, September 15, 2007

முதல் கவிதை - கடவுள் வாழ்த்து

கண்களை மூடிக் கொண்டு
சூழ்நிலைக் கைதியாய்
சுவாசிக்கக் காற்றின்றி
தினமொருமுறை
தீமுன்னே முகம் விழித்து
காண வரும் - என்னுடைய
கண்ணிரண்டைத் திறக்கச்செய்து
முடிவிலா உலகினை
முக்காலும் உணரச்செய்த - தாய்
மூகாம்பிகையே -
நல்லவர்கள் நலம்பெற,
நாளுமுனை தினம் தொழ
அருள்புரிவாய் தேவி!

No comments: